India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடசென்னை, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கவுர நிதாய் ரத யாத்திரை திருநின்றவூரில் நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த ரத யாத்திரையை சிடிஎச் சாலையில் திருநின்றவூர் நகராட்சித்தலைவர் உஷாராணி ரவி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரதம் திருநின்றவூர் மேம்பாலம், பெரியபாளையம் சாலை, கோமதிபுரம் பிரதான சாலை, கோமதிபுரம் 3வது குறுக்குத் தெரு வழியாகச் சென்று திருநின்றவூர் இஸ்கானை அடைந்தது.
ஆறுமுகம் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் நேற்று மாருதி சுசூகி காரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துார் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதி 10 அடி ஆழமுள்ள மழைநீர் செல்லும் கால்வாயில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.
கோத்தகிரி அருகே உள்ளது பெந்தட்டி. நேற்று (மே 1) இரவு சிறுத்தை ஒன்று கிராம நடைபாதை வழியாகச் சென்றுள்ளது. நடைபாதையை ஒட்டிய வீட்டில் குடியிருக்கும் மைதிலி என்ற பெண் இதை பார்த்து அச்சமடைந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக ‘லாங்உட்’ வன பகுதிக்குச் சென்றுள்ளது. இது குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அப்துல் என்பவர் நேற்று மாலை அடைக்கலாபுரம் வழியாக திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கிய போது கார் முழுவதும் தீயில் எரிந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்த நபர்களை சினிமா பாணியில் போலீசார் நேற்று விரட்டிச் சென்று பிடித்தனர். இதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள், ஆம்னி கார் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பரத்குமார்,சிவக்குமார் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.
நாட்றம்பள்ளி சமையனூரை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் நேற்று அஸ்வின், அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் ஆகிய 5 பேரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அஸ்வின் என்பவர் சரவணன் வீட்டின் அருகே உள்ள பெண்ணை காதலித்து வந்ததை சரவணன் பெண்ணின் தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த ராமநாதபுரம் மக்களவை சுயேச்சை வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் நிதி வழங்கவும் கோரிக்கைவிடுத்துள்ளார் .
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரில் நேற்று இரவு கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரை to திருவண்ணாமலை தினசரி ரயில் நாளை 02.05.2024 முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது செயல்பாட்டுக் காரணங்களால் மேலும் ஆலோசனை வரும் வரை இந்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெறப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அரசியல் கட்சியினர் சென்னையில் தண்ணீர் பந்தலை திறக்கலாம் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை. இதன் மூலம் எந்தவொரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது. கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கடைபிடிக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.