Tamilnadu

News May 2, 2024

மாவட்ட அதிமுக செயலாளருக்கு முன்ஜாமீன்

image

நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News May 2, 2024

பூதப்பாண்டி பகுதியில் மின்தடை ரத்து!

image

பூதப்பாண்டி மற்றும் அழகியபாண்டியபுரம் மின்விநியோகப் பிரிவிற்குட்பட்ட இறச்சகுளம், கடுக்கரை, தாழக்குடி ஆகிய உயர் அழுத்த மின்பாதைகளில் இன்று மற்றும் 4, 6ம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பூதப்பாண்டி பகுதியில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News May 2, 2024

சிவகாசியில் துவங்கிய புத்தக கண்காட்சி!

image

சிவகாசியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமுஎகச மற்றும் ஜே.சி.ஐ சிவகாசி டைனமிக் இணைந்து நடத்தும் கோடைகால புத்தக கண்காட்சி நேற்று முதல் துவங்கியுள்ளது. புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த மேயர் சங்கீதா இன்பம் புத்தக அரங்கினை பார்வையிட்டார். இதில் 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

திருச்சி:மாநில ஒருங்கிணைப்பாளர் ஆய்வு.

image

இல்லம் தேடி கல்வி மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்சி கீழரசன் சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளியில் நடைபெறும் இ கே ஒய் சி பணியில் சந்தித்த சிரமங்கள் குறித்து தன்னார்வலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து காலை உணவு திட்டம் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.இந்த திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

News May 2, 2024

திருவாரூர்:மே தின கூட்டத்தில் பங்கேற்ற எம்பி,எம்எல் ஏ

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர் பகுதியில் 138 வது மே தின பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது இந்நிகழ்வில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம் செல்வராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு மே தின பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர் இந்நிகழ்வில் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

News May 2, 2024

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

image

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குடிநீர் தேவைக்கான தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று(மே 1) காலை 6 மணி முதல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

சோளிங்கரில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்

image

சோளிங்கரில் சி.எம்.அண்ணாமலை பில்டர்ஸ் சார்பில் நிறுவனர் தமிழரசன் தலைமையில் உழைப்பாளர் தினம் நேற்று(மே 1) கொண்டாடப்பட்டது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் காந்தி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டனர். மாவட்ட து.செயலாளர் சிவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

தென்காசி: நகராட்சி சேர்மன் வேண்டுகோள்

image

தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர் மே1ல் வெளியிட்ட அறிக்கை: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நீா்வள ஆதார அமைப்புகளில் குடிநீா் இருப்பு மிக குறைவாக உள்ளது. மேலும், பருவமழையும் சரியாக பெய்யாததால் நகராட்சியிலுள்ள வாா்டுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட்ட குடிநீரையும் தற்போது சீராக வழங்க இயலவில்லை.
எனவே, தென்காசி நகர பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்

News May 2, 2024

சிட்டி ரோட்டரி சங்கம் விருதுகள் வழங்கும் விழா

image

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக MA கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி , சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா , மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , துணை மேயர் மு. லியாகத் அலி அ, சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அசோகன் மற்றும் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

புதுக்கோட்டையில் மே தின கொடியேற்று விழா

image

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் மே தின கொடியேற்று விழா இன்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு
அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநில தலைமை நிலையச்செயலாளர் மகேந்திரகுமார் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மே தின சிறப்புறையாற்றினார்.

error: Content is protected !!