India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில், வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை பீடர் உயர்அழுத்த மின் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நாளை(மே 3) நடைபெறுகிறது. இதனால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநயினார் குறிச்சி, மூங்கில்விளை, கல்படி, காருபாறை, ஞாறோடு, மணவிளை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தகவல்.
தொழிலாளா் தினமான மே 1 அன்று அனைத்து நிறுவனங்களும், ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதியை மீறி மதுரையில் 114 நிறுவனங்கள் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958, மோட்டாா் போக்குவரத்துத் தொழிலாளா் சட்டம் 1961 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எர்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் நேற்றிரவு (மே 1) புகுந்த 3 காட்டு யானைகள் மா மரங்களின் கிளைகளை முறித்து சேதப்படுத்தின. இதையடுத்து உலகநாதன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஏரியில் தனியார் கல்லூரி இன்ஜினியரிங் மாணவர் கரண் (21) தனது நண்பர்களுடன் நேற்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கரண் சிறிது நேரத்தில் மாயமானார். நண்பர்கள் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் பொன்னேரி தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய கரணை தேடி வருகின்றனர்.
புதுவையில் டெங்கு பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை இயக்குநரை சந்தித்து பாஜக எம்எல்ஏ அசோக்பாபு நேற்று மனு அளித்தார். அதில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு துறையின் மூலம் ட்ரோன் கருவியை பயன்படுத்தி, புதுவை மாநிலத்தில் வீடு, கழிவுநீர் வாய்க்கால் & நீர் நிலைகளில் தேங்கி உள்ள தண்ணீரில் தடுப்பு மருந்து தெளித்து டெங்கு இல்லாத புதுவையாக மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா தலைமையில் மே தின விடுமுறை நாளில் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 103 நிறுவனங்களில் மே விடுமுறை தின சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் லிங்கேகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30), பனியன் நிறுவனத் தொழிலாளி. 2018ஆம் ஆண்டு செல்போன் பேசியபடி நடந்து சென்றபோது மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக அருணாச்சலம் (20) மற்றும் விஜயராம் (21) ஆகியோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் தலைமறைவான நிலையில் நேற்று போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் மயடிபுதூரை சேர்ந்தவர் மகேந்திரன் (31). இவர் நேற்று மதியம் நண்பர்கள் 2 பேருடன் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மகேந்திரன் ஆழமான பகுதிக்கு சென்ற போது தண்ணீரில் மூழ்கினார். பின் அருகில் இருந்தவர்கள் மற்றும் மீனவர்கள் மகேந்திரன் உடலை சடலமாக மீட்டனர். இதுபற்றி பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர் போலீசார் மேல் வெங்கடாபுரம் பகுதியில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பர்கூர் மகேந்திரன் (51), துரைஸ் நகர் சுரேஷ்குமார் (41). குண்டியால்நத்தம் ரமேஷ் (37), எண்டுசெட்டி தெரு சந்திரசேகரன் (45), சிவக்குமார் (47) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.
கரியாபட்டி அருகே நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதில் கல்குவாரியின் உரிமையாளர் சேது நேற்று கைது செய்யப்பட்டார். வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ராம்ஜி, ராமமூர்த்தியை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.