Tamilnadu

News May 2, 2024

சென்னையில் 3 நாட்களுக்கு வெப்ப அலை

image

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

திருச்சி அருகே மூன்று பேர் அதிரடி கைது

image

மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எஸ்ஐ சங்கர் தலைமையிலான குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாலாஜி நகர் பகுதியில் ஜவகர், தங்கதமிழ்செல்வன் , சரவணகுமார் ஆகிய மூன்று பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

அனைத்து நாட்களிலும் ஆதார் சேவை

image

நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜோஜப்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அஞ்சலகங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவைகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் புதியதாக ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், திருத்தம் போன்ற சேவைகளை பயன்படுத்தி கொண்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News May 2, 2024

கோவை அருகே தங்கும் விடுதிக்கு சீல்

image

வால்பாறையை குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் ஸ்ரீராம் தேயிலை தோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த தோட்ட வளாகத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த வால்பாறை கூட்டுறவு காலனியை சோ்ந்த ராம் பிரசாத், ஸ்டேன்மோா் எஸ்டேட்டை சோ்ந்த பிரபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசாரின் விசாரணையில் விடுதி அனுமதியின்றி செயல்படுவது தெரிந்து அதனை நேற்று சீல் வைத்தனர்.

News May 2, 2024

கொடைக்கானலில் தொடரும் காட்டுத் தீ

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை, பூம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. உள்ளூர் மக்களும், தீயணைப்பு துறையினரும் தீயை தொடர்ந்து அனைத்து வரும் நிலையில் இன்றும் ஏழாவது நாளாக தீ பற்றி எரிந்து வருகிறது. அதிகாலையில் பனிமூட்டம் போல் புகை சூழ்ந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

News May 2, 2024

கடலூரில் 55 பேர் கைது 

image

கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் அறிவுறுத்தியதின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்றுக் கொண்டிருந்த 55 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1034 மதுபாட்டில்கள், 6 லிட்டர் சாராயம், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News May 2, 2024

விடுமுறை அளிக்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தேசிய விடுமுறை நாளான மே.1 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள். உணவு, வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 91 நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 40 என 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

73 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

image

தேசிய விடுமுறை தினமான மே.1 இல் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்படி நேற்று தொழிலாளர் துறை அமலாக்க உதவி ஆணையர் மின்னல் கொடி தலைமையிலான அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் 73 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 2, 2024

ஆம்பூர் அருகே திடீர் தீ விபத்து 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் இருந்து சேதமாகியது. இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 2, 2024

இலவச கோடைகால பயிற்சி முகாம் – ஆட்சியர்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதில் கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளாா்.

error: Content is protected !!