India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனிமய மாதா பேராலயம் கத்தோலிக்க திருச்சபை, 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். இது கிறித்துவர்களின் யாத்திரைத் தலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 பசிலிக்கா ஆலயங்களில் இதுவும் ஒன்று. அன்னை மேரி சிலைக்கு தங்க காரில் ஊர்வலம் எடுத்து பத்துநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. 2017 இல் இதில் ஒரு சில இடங்கள் புதுப்பிக்கப்பட்டது.
நீலகிரியில் தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என குன்னூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில். குன்னூர். ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் இயங்கும் 38 நிறுவனங்கள் விதி மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த 38 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான தேர்வில் மாணவர்கள் 10 ஆம் தேதியும், மாணவிகள் 11 ஆம் தேதியும் காலை 6.00 மணியளவில் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கலந்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு 9514000777 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற மே நான்காம் தேதி வரை 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வீசக்கூடும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நெடுந்தூர பயணங்களை தவிர்த்து காலை 11மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டிலேயே இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் நேற்று மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் கல்குவாரி நிர்வாகம் சார்பாக தலா 12 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 50,000 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாகவும், 11.50 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.
பரமக்குடியில் காலித் நிறுவனம் சார்பில் 36வது கிளையை இன்று திறந்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு 180 ரூபாய் விலையுள்ள ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் இன்னொரு சிக்கன் பிரியாணி இலவசமாக கொடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதனையடுத்து கூட்டம் அலைமோதியதால் பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஃபர் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.
சிங்கப்பூரில் சாய் யோகா ஸ்போர்ட்ஸ் அகாடமி, பாரதிய சுவாமி விவேகானந்தா அகாடமி, யோகா ஸ்போர்ட்ஸ் அசோசியன் சார்பாக உலக அளவிலான யோகா போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 வயது பிரிவில் சிவகங்கை சிவம் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் பங்கேற்ற மாணவி சஞ்சனா முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட செல்வபுரம் முதல் காவல் நிலையம் வரை செல்லும் சாலையானது மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலையினை சீரமைக்காமல் பல்வேறு வனசட்டங்களை கூறி அப்பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடுத்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அருகே உள்ள பணங்காட்டுபாளையம் என்ற இடத்தில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 7 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கராஜ்(38)என்பவரை போலீசார் கைது செய்தனர்
ஆலங்குடி அருகே உள்ள
கீழப்பட்டியை சேர்ந்தவர் பழனி வேல்.இவரது மகள் ராஜலெட்சுமி இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு 2 ஆண்டுகளாக வீட்டில்
இருந்துள்ளார்.நேற்று மதியம் வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது.பின்னர் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது சோபாவில் ராஜலெட்சுமி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.