Tamilnadu

News May 2, 2024

ராமநாதபுரத்தல் இளநீரின் விலை அதிகரிப்பு

image

தொண்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து விடுபட பொதுமக்கள் அதிகளவில் இளநீர் குடித்து வருகின்றனர். இதனால் இங்கு இளநீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News May 2, 2024

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிடுக!

image

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, ஏற்காடு தனியார் பேருந்து விபத்தில் பலியான 5 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் என அரசின் சார்பில் நிதியுதவி வழங்கவும், உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

News May 2, 2024

ஏற்காட்டில் தயாராகும் 30,000 மலர் செடிகள்

image

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் 2 மாதத்திற்கு முன்பே 30 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் பூக்கள் பூத்து கோடை விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பல வகையான பூச்செடிகளில் பூக்கள் மலர தொடங்கி உள்ளன. இந்த செடிகளை சுற்றுலா பயணிகள் நேற்று ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.

News May 2, 2024

நாமக்கல் அர்த்தநாதீஸ்வரர் கோவில் சிறப்பு!

image

நாமக்கல், திருச்சங்கோடு அர்த்தநாதீஸ்வரர் கோவில், கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள 7 சிவ தலங்களுள் ஒன்றாகும். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் சிவன், பாதி பெண்ணாகவும், மீதி பாதி ஆணாகவும் இருக்கும் அர்த்தநாதியாக காட்சியளிக்கிறார். 1200 படிகள் கொண்ட இத்தலத்தில் சம்பந்தர் தேவாரம் பாடியுள்ளார். மிகவும் தொண்மையான இக்கோவில் அமைந்துள்ள திருச்செங்கோட்டின் புராண பெயர் திருக்கொடிமடச்செங்கோண்டுரூர் ஆகும்.

News May 2, 2024

இ-பாஸ் நெறிமுறைகள் இன்று மாலை வெளியீடு

image

மே. 7 ஆம் தேதி முதல் ஜீன். 30 ஆம் தேதி வரை கொடைக்கானலுக்கு செல்ல இ- பாஸ் வேண்டும் என அறிவிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் அளிக்க தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

News May 2, 2024

அரூர்: இளைஞர்கள் அமைத்த தெருவிளக்கு

image

அரூர் அருகே உள்ள சோரியம்பட்டி புதூர் மெயின் ரோட்டில் தெரு மின்விளக்கு அமைத்து தர வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மோப்பிரிபட்டி பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்‌.
ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று(மே 1) அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதிக்கு மின்விளக்கு அமைத்துள்ளனர்.

News May 2, 2024

இளைஞர் விருது பெற அழைப்பு

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது எனவே தகுதியுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News May 2, 2024

ஹிட்லரின் வழியை பயன்படுத்தும் பிரதம் மோடி – முத்தரசன்

image

ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்
முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது. தோல்வி பயத்தால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பிரதமர் பேசியிருக்கிறார். ஹிட்லரின் வழியை மோடி பின்பற்றுகிறார். மேலும் பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல என தெரிவித்தார்.

News May 2, 2024

குமரியில் கவுன்சிலர் பைக் எரிப்பு

image

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.30) தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் எரிந்த நிலையில் இருந்தது. முன்விரோதத்தில் பைக்கை எரித்ததாக ஹரிஹரன் என்பவரை கன்னியாகுமரி போலீசார் தேடி வருகின்றனர்.

News May 2, 2024

5 நாளில் 32,616 பேர் வருகை!

image

கோடை விடுமுறை சீசனை ஒட்டி சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 5 நாளில் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 32 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பார்வையிட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!