Tamilnadu

News May 2, 2024

கடலூர் அருகே பெண்கள் மட்டுமே சுமந்து சென்ற தேர்!

image

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் அடுத்த நெல்லிக்குப்பத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சூசையப்பர் ஆண்டு பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த பெருவிழாவில் குழந்தை இயேசு தேர் மற்றும் மாதா தேரை பெண்கள் மட்டுமே தங்களின் தோள்களில் சுமந்து தூக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

மயிலாடுதுறை அருகே கோர விபத்து; மூன்று பேர் மரணம்  

image

இன்று காலை 10:30 – 11:00 க்குல் தரங்கம்பாடி- காரைக்கால் செல்லும் சாலையில் தெரசா கல்லூரி முன்பாக ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளைஞர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே பலி. பலியான மூவரும் யார் என்பது தெரியவில்லை. இதனைக் குறித்து பொறையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 2, 2024

கல்குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு

image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கல்குவாரிகளில் வெடிமருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News May 2, 2024

விழுப்புரத்தின் கம்பீரமான செஞ்சி கோட்டை

image

விழுப்புரத்தில் அமைந்துள்ளது செஞ்சி கோட்டை. மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய மலைகள், 12 கி.மீ நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்து, முக்கோண வடிவமாக அமைந்துள்ளது இக்கோட்டை. பல போர்களை சந்தித்த செஞ்சிக் கோட்டையை பல்லவர்கள் வழிவந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.

News May 2, 2024

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் கலெக்டர் ஆலோசனை

image

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 2) நடந்தது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

News May 2, 2024

ரேஷன் கடைகளில் கருவிழிப்பதிவு மே 13 முதல் துவக்கம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பகுதிகளில் ஆதார் இணைக்கப்பட்டு மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு இருந்தது. ரேஷன் கடையில் கைரேகை பதிவு கார்டுதாரின் உண்மை தன்மை பதிவு செய்யப்பட்டு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 810 ரேஷன் கடைகளுக்கு வரும் 13ஆம் தேதி கண் கருவிழிப்பதிவு செய்து உணவு பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 2, 2024

இறந்த மூதாட்டி உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

image

பொன்னேரியை அடுத்த சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால். இவரது தாயார் முத்தம்மாள் (72), வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது விருப்பத்தின்படி, அவரது உடல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக மாணவர்களின் ஆய்விற்கு பயன்படுத்திக் கொள்ள அனுப்பிவைக்கப்பட்டது.

News May 2, 2024

நீலகிரி வாலிபர் இத்தாலியில் மர்ம சாவு

image

பந்தலூர் ஆனைகட்டியை சேர்ந்தவர்கள் வில்சன்-தங்கமா தம்பதி. இவர்களின் மகன் சஜீஷ் (34). இவர் 2018 முதல் இத்தாலியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாததால் இத்தாலியில் உள்ள சஜீஷின் உறவினர் உதவியுடன் விசாரித்தபோது அவர் உயிரிழந்ததும், அவரது உடல் இத்தாலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சஜீஷ் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News May 2, 2024

தொடர்ந்து அச்சுறுத்திய 3 பேருக்கு குண்டாஸ்

image

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் கைதாகிய ஆறுமுகம், அழகர், முத்துப்பாண்டி ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்கள் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

News May 2, 2024

கிருஷ்ணகிரி: ஒற்றையானை தாக்கி விவசாயி பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி அடர்வனப்பகுதியாக உள்ள நிலையில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை கிராம பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களிலேயே சுற்றி வருகிறது. இந்நிலையில் மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா (55) என்பவர் இன்று காலை தனது விளைநிலத்திற்கு சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தார்.

error: Content is protected !!