Tamilnadu

News May 2, 2024

சுட்டிக்காட்டிய வே டூ – உடனடி நடவடிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் நேற்று வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News May 2, 2024

சிசிடிவி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவின் படக் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News May 2, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூருக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

சேலம் மாவட்டத்திற்கு இன்று(மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரிக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

புதுவை: நடுரோட்டில் நிர்வாணம் – பரபரப்பு

image

புதுச்சேரி காந்தி வீதியில் நேற்று மாலை 5:00 மணிக்கு, 45 வயது மதிக்க தக்க நபர், உடலில் ஒட்டு துணி இன்றி நிர்வாணமாக நடந்து சென்றார். தொடர்ந்து அஜந்தா சிக்னல் நோக்கி வேகமாக ஓடியவர் திடீரென நேரு வீதி நோக்கி வேகமாக நடந்தார். சாலையில் சென்ற பெண்கள் அவரை கண்டு முகம் சுளித்தனர். தகவலறிந்து வந்த பெரியக்கடை போலீசார் அவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

மதுரை கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

image

மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2956 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 2652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3120 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News May 2, 2024

வேலூரில் ஜொலிக்கும் பொற்கோவில் சிறப்புகள்!

image

ஸ்ரீ புரம் என்றழைக்கப்படும் ஸ்ரீ லஷ்மி நாராயணி கோவில் வேலூர், திருமலைகோடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தைப் பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரசில் இருக்கும் பொற்கோயிலின் உட்புற விமானத்தின் அளவை விட இரட்டிப்பாக உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவம் போல் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

முறம், துடைப்பத்தால் அடி வாங்கிய பக்தர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு ஊராட்சியில் உள்ள டி.கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள திரவுபதி தர்மராஜ சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. டி.கொத்தப்பள்ளி, கூட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அருள் வந்து ஆடிய கோவில் பூசாரி முறம் மற்றும் துடைப்பத்தால் பக்தர்களை அடித்து ஆசி வழங்கினார்.

error: Content is protected !!