Tamilnadu

News May 2, 2024

தனியார் அடுக்குமாடி குடியிருப்புகாக பாலம்

image

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில், ஈஷா மின் மயானம் அருகே நொய்யல் ஆற்றின் கிளையான ராஜவாய்க்காலில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரிய புளியமரம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்காக இந்த வழித்தடம் போடப்படுவதாக கூறப்படுகிறது. 40 அடி அகலம் கொண்ட ராஜ வாய்க்காலில், 10 அடி அகலத்திற்கு பாலம் கட்டி, மீதமுள்ள கால்வாய் மூடப்பட்டுள்ளதாக இன்று குற்றசாட்டு எழுந்துள்ளது.

News May 2, 2024

புதுகை: சூடு பிடிக்கும் நுங்கு விற்பனை

image

முக்கண்ணாமலைப்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர் இந்த நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலையில் இன்று முக்கண்ணாமலைப்பட்டியில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.

News May 2, 2024

சென்னை- செங்கல்பட்டு வந்தே மெட்ரோ ரயில் சேவை

image

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை “வந்தே மெட்ரோ” ரயில் சேவை கொண்டுவரப்பட உள்ளது. ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமான புகைப்பட விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 2, 2024

கிருஷ்ணகிரியின் கம்பீரக் கோட்டை !

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி கோட்டை. பல்வேறு பல போர்களையும், பல ஆட்சிகளைக் கண்ட பெரிய வரலாற்றைக் கொண்ட இக்கோட்டை விஜயநகர பேரரசின் காலத்தில், 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோட்டையை கைப்பற்றுவதற்காகவே பல போர்களும் நடத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வசம் இக்கோட்டை சென்ற போது ஆயுத கிடங்காக மாறியிருந்தது. தற்போது வரலாற்றுச் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.

News May 2, 2024

திருவண்ணாமலை: திட்டமிட்டபடி ரயில் சேவை தொடங்கும்

image

திருவண்ணாமலை – சென்னை கடற்கரையில் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வழியாக திருவண்ணாமலை வரை இன்று தொடங்க இருந்த ரயில் போக்குவரத்து ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று திருவண்ணாமலைக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 2, 2024

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மாவட்ட கல்வி பொறுப்பு அலுவலராக மரகதம் இன்று நாமக்கலில் தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மரகதத்திற்கு நாமக்கல்லைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் தன்னார்வலரும் பசுமை தில்லை சிவக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.

News May 2, 2024

மனைவி மரணம்: கணவர் வைத்த வேண்டுகோள் 

image

சென்னை: பின்னணி பாடகி உமா ரமணன்(69) வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவு குறித்து உமாவின் கணவரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஏ.வி.ரமணன், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த சம்பவம் எதிர்பாராத ஒன்று. உமாவின் இறுதிச் சடங்கு எங்களது தனிப்பட்ட நிகழ்வாக இருக்க விரும்புகிறோம். இதனால், ஊடகங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News May 2, 2024

சிவகங்கை: 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தொழிலாளர் தினமான நேற்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் விதிமீறி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் 114, ராம்நாட்டில் 34, விருதுநகரில் 97 நிறுவனங்கள் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

கே.வி. குப்பம் அருகே மூன்று ஆடுகள் உயிரிழப்பு

image

கே.வி. குப்பம் தொகுதிக்குட்பட்ட சேத்துவண்டை பகுதியில் மோனிஷ் என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை இன்று மர்ம விலங்கு கடித்து கழுத்து மற்றும் உடல் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. மேலும் இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 2, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ,வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!