Tamilnadu

News May 2, 2024

முழுவதுமாக சாலை அமைக்க மக்கள் போராட்டம்

image

மன்னார்குடி 15 வது வார்டு கனகசபை பிள்ளை தெருவில் 200 மீ நீளம் தார் சாலை போடும் பணி இன்று தொடங்கியது. இந்நிலையில் 100 மீ மட்டுமே சாலை அமைக்கப்படும் என தகவல் வெளியானதால் தெருவாசிகள் சாலை அமைக்கும் இயந்திரங்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் 200 மீட்டர் தார் சாலை அமைக்கப்படும் என உறுதியாக தெரிவித்த பின் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.

News May 2, 2024

எல்லை பாதுகாப்பு பணியின் போது காரைக்கால் வீரர் மரணம்

image

காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் இந்திய திபெத் எல்லைக் காவல் படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி இந்தியா – சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரேம்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்த பிரேம்குமார் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் திருப்பட்டினம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

News May 2, 2024

வேலூர் அருகே கார் மோதி முதியவர் பலி

image

வேலூர் ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (64). இவர் நேற்று கீழ்மொணவூரில் நடந்த உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் கீழ்மொணவூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென முருகேசன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 2, 2024

ராம்நாடு அருகே விபத்து: இருவர் பலி

image

சாயல்குடி அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் மறக்குளம்
சதீஷ்குமார் (33), சின்ன உடப்பங்குளம்
பழனிமுருகன் (28) ஆகியோர் டூவிலரில் இன்று மாலை
பரளச்சி சென்றனர். அப்போது சாயல்குடி சென்ற டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த இருவரும் இறந்தனர். இருவரின் உடல் கமுதி அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 2, 2024

வழக்கறிஞர் சங்க தலைவர் தேர்வு

image

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கத்திற்கு 2024-2025ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பொதுச்செயலாளராக சரவணக்குமார், துணைத் தலைவராக டி. சி. பி. சக்கரவர்த்தி, பொருளாளராக பி. சரவணக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 2, 2024

தர்மபுரி சுற்றுவட்ட பகுதியில் சாரல் மழை

image

தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதே போல் தருமபுரி மாவட்டத்தில் இன்று வெயிலின் தாக்கம் 108 டிகிரியாக அதிகரித்தது. அதே போல் இன்று மாலை 5 மணி அளவில் மேகங்கள் கருமேகம் கூட்டம் சாய்ந்து உள்ளது. தற்போது ஆறு மணி அளவில் தர்மபுரி சுற்றுவட்ட பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 2, 2024

இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நிவாரணம் தர உத்தரவு

image

தூத்துக்குடியைச் சார்ந்த ஜோ வில்லவராயர் என்பவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கான தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் தராத நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5,81,458 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News May 2, 2024

தூத்துக்குடி மாநகராட்சியின் பகிரங்க எச்சரிக்கை

image

தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் அபராத தொகை விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதனை மீறி எவரேனும் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றால் அபராதம் விதிப்பதுடன் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News May 2, 2024

கடலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு

image

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 2, 2024

நாமக்கல்: பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று மாலை மாவட்ட அளவிலான தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.தொடர்ந்து கோடை வெயிலால் மாவட்டத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக தீ விபத்தும் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

error: Content is protected !!