Tamilnadu

News May 2, 2024

நீர் உறிஞ்சி கிணறுகளை ஆய்வு

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன் பேரையூர் அருகில் உள்ள வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் மூன்று நீர் உறிஞ்சி கிணறுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ள அறிய வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களும் கீழ்க்காணும் ஆவணங்களை அளித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News May 2, 2024

திருவள்ளூர் ஆட்சியரிடம் வாழ்த்து

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபா அவர்களை பாராட்டி உயர்கல்வி வழிகாட்டி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

News May 2, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் ஆய்வு

image

காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் இன்று பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

News May 2, 2024

கடையில் வாங்கிய முறுக்கில் இறந்து கிடந்த பூரான்

image

நெல்லை உடையார்பட்டியில் வசிக்கும் குரு மகாராஜன் நெல்லை தனியார் ஸ்வீட் ஸ்டாலில் முறுக்கு வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிட பிரித்து பார்த்தபோது அதில் பூரான் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரரிடம் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று (மே 2) குரு மகாராஜன் உணவு பாதுகாப்பு துறை தலைமை ஆய்வாளருக்கு புகார் அனுப்பி உள்ளார்.

News May 2, 2024

சீரான குடிநீர் வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இயக்குனர் பொன்னையா தலைமையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

தற்காலிக டிரைவர் பணிக்கு அறிவிப்பு

image

ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 15 தற்காலிக டிரைவர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு படித்த 25 வயதிற்குள்ளோராக இருக்க வேண்டும். 2 ஆண்டு அனுபவத்துடன் சரக்கு மற்றும் பயணிகள் வாகனத்தை இயக்கும் லைட் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6 ஆகும். மேலும் விவரங்களுக்கு <>லிங்க் கிளக்<<>> செய்யவும்

News May 2, 2024

பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

image

சிவகங்கை, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, களத்தூர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி கிராம பொதுமக்கள் சிவகங்கை மாவட்டம் ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர்.

News May 2, 2024

வேலூர் மாவட்டத்தில் இன்றைய வெயில் அளவு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 2) அதிகபட்ச வெயிலாக  110.5°F வெயில் பதிவானது. பகல் நேரத்தில் பொதுமக்கள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால்  குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

News May 2, 2024

ஜிசிடி கல்லூரி வளாகத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை

image

கோவை தொகுதியில் வாக்குகள் பதிவான இவிஎம் இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அதனை பாதுகாக்க வரும் மே.2 காலை 6 மணி முதல் மே.6 காலை 6 மணி வரை ஜிசிடி கல்லூரி, சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வடகோவை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல பகுதிகள் தற்காலிக ரெட் ஜோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதித்து மாநகர போலீஸ் இன்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!