Tamilnadu

News May 3, 2024

எக்ஸ்பிரஸ் ரயில் திடீர் புகை

image

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்பட்டி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் பொது பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. சக்கரத்தில் பழுது ஏற்பட்டு புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

News May 3, 2024

கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே வங்கமனத்து பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் மகன் விக்னேஷ்(22) நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாணார்பட்டி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 2, 2024

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் அமைந்துள்ள மூங்கில் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (03.05.2024) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவித்துள்ளனர்.

News May 2, 2024

மதுரை கலெக்டர் முக்கிய அறிவுரை

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில், வெயிலின் தாக்கத்தினை சமாளிக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் (ம) வெப்பத்தினை பொதுமக்கள் எதிர்கொள்ள வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மதுரை மாவட்டத்தில் மதிய வேளையில் குறிப்பாக 11 மணி முதல் 3.30 மணி வரை
வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.

News May 2, 2024

காவல் வாகனங்கள் ஏலம் விட முடிவு

image

கன்னியாகுமரி மாவட்ட போலீஸில் முதிர்ந்த நிலையில் கழிவு
செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வரும் 16.05.2024 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில், மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும். விருப்பம்
உள்ளவர்கள் 16.05.2024 அன்று ரூ.1000- செலுத்தி ஏலத்தில்எ பங்கேற்கலாம் என மாவட்ட காவல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News May 2, 2024

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இருமுறை நிதி ஒதுக்கீடு

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே நாயக்கன்பேட்டை பகுதியில் ஆற்றங்கரை அருகாமையில் ஆழ்துளை கிணற்றில் ஊராட்சி நிதியிலிருந்து ரூ.5.80 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளதாக ஒரு புறம் எழுதப்பட்டுள்ள நிலையில் மற்றொருபுறம் 15-ஆவது நிதி குழு ரூ.3.60 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளதாக இருவிதமாக எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News May 2, 2024

ஐபிஎல் டிக்கெட் விற்ற 13 பேர் கைது

image

சென்னை- பஞ்சாப் இடையேயான போட்டி நேற்று (மே.1) சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் போது கள்ளச்சந்தையில் சிலர் டிக்கெட் விற்பனை செய்ததாக காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி காவலர்கள், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News May 2, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

தேர்வு எழுதாத மாணவர்களை தேர்வு எழுத நடவடிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற +2 தேர்வில் 150 மாணவ, மாணவிகளும், 10ம் வகுப்பு பொதுதேர்வில் 123 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதவில்லை. அதன்படி மொத்தம் 273 மாணவ, மாணவிகளையும் முதன்மை கல்வி அலுவலர் உஷா மேற்பார்வையில் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு துணை தேர்வு எழுத வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 2, 2024

குடிநீர் விநியோகம் நிறுத்தம்- பொதுமக்கள் கவனத்திற்கு

image

சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2-ம் தேதி மாலை முதல் 3-ம் தேதி மாலை வரை சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோம் நிறுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!