India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் வாகனப் புகைப்பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேம்படுத்திட புதிய PUCC 2.0 Version -ஐ வரும் திங்கட்கிழமை (6.5.2024) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு, செய்ய தவறும் வாகனப் புகைப் பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள அருள் மிகு ஶ்ரீ செடிலாடும் செங்கழு நீர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் செங்கழுநீர் அம்மன் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இந்நிகழ்வில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதியில் நீலகிரி முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் முகாம் அலுவலகம் (CAMP OFFICE) தற்போது மாவட்ட ஆவண காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இதனை காண கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் அருகே ஜான் சல்லிவன் நினைவு பூங்கா உள்ளது. நடப்பாண்டு வறட்சி காரணமாக பராமரிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளதால் இதை பார்க்க வருபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அலுவலகத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இதில் வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாமக நிர்வாகிகள் திருக்கச்சூர் ஆறுமுகம், காயார் ஏழுமலை, பிவிகே. வாசு, பார்த்தசாரதி பங்கேற்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகள் தாவரவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக நாசர் என்பவர் பணிபுரிந்தார். வருகிற 31ஆம் தேதி இவரது பணி நாள் முடிவுறுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தாவரவியல் ஆசிரியர்கள் பாராட்டு விழா நடத்தினார்கள். இதில் துறை சார்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மார்ட்டின் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆக்குருதி சார்பில் ப்ராஜெக்ட் திரலக்ஸா மெகா வேலை வாய்ப்பு முகாம் மற்றும் தையல் மெஷின் வழங்கும் நிகழ்ச்சியின் நிறைவு நாள் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஆலம் மூலிகைப் பண்ணையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்ட்டின் குரூப் ஆப் அறக்கட்டளையின் தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு தையல் மிஷின் வழங்கினார்
முத்துப்பேட்டையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து பேரூராட்சி சார்பில் 18 பேரூராட்சியிலிருந்து வந்த செயல் அலுவலர்கள் தலைமையில் அதிகாரிகள் இன்று 18 வார்டுகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் இதில் 33க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுக்கப்பட்டிருந்த 32 சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பால விக்னேஷ் என்பவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோனில் கழிவுகள் தனியாக சேமித்து வைத்துள்ளார். அதில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டமாக காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள் கோவில்பட்டி தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் அருகே உள்ள பருவக்குடி, குருவிகுளம் ஆகிய பகுதிகளில் நாளை(மே.4) ஆதார திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரின் மையத்தில் அமைந்துள்ள சுபம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாகணபதி ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முகூர்த்த நேரத்தில் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்திற்கு வாசக்கால் வைக்கும் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Sorry, no posts matched your criteria.