India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(48). பாலக்கரை பகுதியில் தரைக்கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம்(மே 1) வெயிலில் வியாபாரம் செய்து வந்த மகேந்திரன் திடீரென சுருண்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தாரா அல்லது உடல்நிலை குறைவா என உடற்கூறு ஆய்வு முடிவிற்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாநகர திமுக சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடந்தது.
வேலூர் மாநகர செயலாளரும், எம்எல்ஏவுமான கார்த்திகேயன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்களை வழங்கினார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் அமைந்துள்ள மூங்கில் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (03.05.2024) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்கத்தலைவர் அசோகன் தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பேசினார். இதில் புதுகை எம்எல்ஏ முத்துராஜா, நகர்மன்றத்தலைவர் திலகவதி, துணைத்தலைவர் லியாகத்அலி, ரோட்டரி மாவட்ட ஆளுனர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி – பணகுடி ரயில்வே தண்டவாளத்தில் நேற்று(மே 2) காலை மிளா ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மிளாவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மார்ச் 26இல் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.நேற்று (மே 2) நயினார் உறவினர் முருகன் ஆசைத்தம்பி ஆகியோரிடம் டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
நீட் நுழைவுத் தோ்வுக்கான இலவச பயிற்சிக்கு, விண்ணப்பித்த 490 மாணவ, மாணவிகளுக்கு ஒத்தக்கடை மாதிரிப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். ஆகிய பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. மாா்ச் 27ல் தொடங்கி தமிழ், ஆங்கில வழியில் பயிற்சிகள், தோ்வுகள் நடைபெற்றன. மேலும், திருப்புதல் மற்றும் வாராந்திரத் தோ்வுகளும் நடைபெற்றன.நேற்று (மே 2) பயிற்சி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் ஆதி ரெட்டியூர் ஸ்ரீ மாரியம்மன் லோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக பூஜை, மாவிளக்கு, திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு கொங்கு நாட்டின் பெருமைக்குரிய வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சென்னை – பஞ்சாப் இடையேயான போட்டி நேற்று முன்தினம்(மே.1) சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியின்போது கள்ளச்சந்தையில் சிலர் டிக்கெட் விற்பனை செய்ததாக காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி காவலர்கள், கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 33 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் குப்பைகள் தேங்கி இருப்பதாக வீடியோவுடன் வே டூ நியூஸில் செய்தி வெளியானது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்கள் கடற்கரையில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.