India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருகின்ற 5 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் பயிற்சி வகுப்பு மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த மாணவர்களுக்கு மாதிரி தேர்வு மன்னார்குடி அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று (மே 2) கடலூரில் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரத்தில் 40 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயிலில் 40 டிகிரி செல்சியஸ், நெய்வேலியில் 42 டிகிரி செல்சியஸ், விருத்தாசலத்தில் 42 டிகிரி செல்சியஸ், திட்டக்குடியில் 42 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நேற்று(மே 2) மாவட்ட கூட்டரங்கில் முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தில் வளர்ந்துவரும் தொழில்துறையில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது எப்படி, இலவச திறன் பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2023-24ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபாவை பாராட்டி தமிழக அரசு சார்பில் உயர்கல்வி வழிகாட்டி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை ஷோபா நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
கரூர் மாவட்ட காவல்துறையின் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு சார்பில் கரூர் ரயில் நிலைய பயணிகளுக்கு இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் லலிதா தலைமையிலான போலீஸார் ரயில் நிலைய பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர். மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண் – 1930 இந்த நம்பரில் பதிவு செய்யலாம்.
அரக்கோணம், பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேரன்(22). இவர் நேற்று(மே 2) இரவு தக்கோலத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தக்கோலம் கூட்ரோடு அருகில் செல்லும்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மே 2ம் தேதி(நேற்று) மாலை முதல் 3ம் தேதி(இன்று) மாலை வரை சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மங்களூரு சென்ட்ரல் டூ நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ்(16649), மங்களூருவில் இருந்து வழக்கமாக காலை 5.05 மணிக்கு புறப்படும் நிலையில் மே 3,5 தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக 5.35 மணிக்கு புறப்படும். அதே போன்று, மங்களூருவில் இருந்து மே 7,11,22,25,29 மற்றும் ஜூன் 5,8 தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக காலை 6.35 மணிக்கு புறப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி கோட்டை. பல்வேறு போர்களையும், பல ஆட்சிகளைக் கண்ட பெரிய வரலாற்றைக் கொண்ட இக்கோட்டை விஜயநகர பேரரசின் காலத்தில், 15-16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோட்டையை கைப்பற்றுவதற்காகவே பல போர்களும் நடத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வசம் இக்கோட்டை சென்றபோது ஆயுத கிடங்காக மாறியிருந்தது. தற்போது வரலாற்றுச் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.
பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன் பேரையூர் அருகில் உள்ள வெள்ளாற்றில் அமைக்கப்பட்டு வரும் 3 நீர் உறிஞ்சி கிணறுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் நேற்று(மே 2) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.