Tamilnadu

News May 3, 2024

குண்டர் தடுப்பு சட்டம்-நீதிமன்றம் அதிரடி

image

பேஸ்புக் நட்பில் இருந்தவர் வன்கொடுமை செய்த புகாரில், குண்டர் சட்ட நடவடிக்கை தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரிய மனு மீதான நேற்றைய விசாரணையில், குண்டர் சட்ட கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இந்த வழிமுறைகளை உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கையாக வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

News May 3, 2024

கரூரில் வழிப்பறி இருவர் கைது செய்த காவல்துறை

image

வெள்ளியணை பகுதியில் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனங்களில் வருவோரிடம் வழிப்பறி செய்வதாக புகார் வந்ததை அடுத்து பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் சங்கரலிங்கம் (28), தேவகோட்டை, தென்னரசு (23) ஆகியோரை நேற்று கைது செய்து ரூ.30,000 மதிப்புள்ள கைப்பேசிகள், ரூ.3000 மற்று இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்

News May 3, 2024

நாமக்கல்லில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் மே 9ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அந்த வகையில், முகாமானது, 9ஆம் தேதி மல்லசமுத்திரம் ஒன்றியம் செண்பகமாதேவி, 16ஆம் தேதி வெண்ணந்தூா் ஒன்றியம் அக்கரைப்பட்டி, 23ஆம் தேதி சேந்தமங்கலம் ஒன்றியம் பள்ளம்பாறை, 30ஆம் தேதி கபிலா்மலை ஒன்றியம் இருக்கூா் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களின் மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையலாம்.

News May 3, 2024

வெயில்: கலெக்டர் முக்கிய எச்சரிக்கை

image

வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி நெல்லையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். எனவே கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசர தேவை இன்றி வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (மே 2) விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 3, 2024

ஸ்டிக்கர் அகற்றாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி

image

தமிழகம் முழுவதும் டூவீலர் மற்றும் கார்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. நேற்றுமுதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் டூவீலர் மற்றும் கார்களில் ஒட்டிய ஸ்டிக்கர்களை இன்றைக்குள் அகற்றிட வேண்டும் என்றும், அகற்றாத வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 3, 2024

வேலூர் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

image

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக இவரை குடியாத்தம் போலீசார் கைதுசெய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். இதையடுத்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (மே 2) மணிகண்டனை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

News May 3, 2024

சென்னை – தி.மலை சிறப்பு ரயில்

image

சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ. 50 கட்டணத்தில் சிறப்பு பாசஞ்சர் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து ரயில் புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மீண்டும் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 சென்னை கடற்கரை வந்தடையும்.

News May 3, 2024

வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பல்

image

சுமார் 387 ஏக்கர் வெக்டர் பரப்பளவு கொண்ட காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் மலைப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மான் வகைகள், குரங்குகள், முயல்கள், சிறுத்தை மற்றும் பலவகை அரிய உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. கடும் வறட்சியை காரணமாக வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ள ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

News May 3, 2024

வாக்கு எந்திரங்களை பார்வையிட்ட வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் கல்லூரி வளாகத்தை திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று (மே 2) மாலை அவற்றை பார்வையிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர்.

News May 3, 2024

விழுப்புரம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

இன்று (மே 3) சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்ல இருக்கின்றனர். இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 200 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!