India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கை ‘க்யூட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதேபோல ‘க்யூட்’ தோ்வு இல்லாமல், முதுநிலை பட்டயம், பி.வொக்., டி.வொக்., சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. சோ்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் மே.31 வரை விண்ணப்பிக்கலாம்.
செய்யார் அருகே செய்யாமூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு மற்றும் அனக்காவூர் பகுதியைச் சேர்ந்த லோகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செய்யாறு பாராசூர் பகுதியில் சென்ற போது கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து செய்யார் அரசு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அபினேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவ்விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியர் பனரோஜா மற்றும் 3 பேரை, பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 குழுக்களை அமைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் முத்தையாபுரம் மற்றும் சிப்காட் மின் விநியோக பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஊரணி ஒத்த வீடு, வாழைக்காய் சந்தை ,காதர் மீரா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நாளை(மே.4) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலங்குடியில் இருந்து கல்லாலங்குடி முத்து மாரியம்மன் கோவில் வழியாக நேற்று சரக்குவேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பொத்தேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அங்கு சென்று குளித்ததில் தர்மபுரி விஜய்சாரதி (19), உடுமலைப்பேட்டை தீபக்சாரதி (20), மன்னார்குடி முகமது இஸ்மாயில் (19) ஆகிய 3 பேர் நீரில் மூழ்கினர். தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் நேற்று மாலை சடலமாக மீட்கபட்டனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தவறிய மற்றும் ஏற்கனவே பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு வசதியாக வருகிற 10ம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன. நெல்லை மாவட்டத்தில் சிறப்பு வகுப்பில் கல்வி மேலாண்மை தகவல் மையம் தளத்தில் மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும். இதை தகுதி உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமிதுரை தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற வெண்மான்கொண்டான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன், அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று லட்சுமி மில்ஸ் ஜங்ஷனில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பெண்கள் தங்களிடம் இளம்பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் எனவும் அழைத்துள்ளனர். இப்புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர்களான திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த சகுந்தலா, மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரை சேர்ந்த கவிதா ஆகிய இருவரை கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலால் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில விவசாயிகள் தங்களின் கிணற்றில் உள்ள கொஞ்சம் நஞ்சம் தண்ணீரை கொண்டு பண்ணப்பள்ளி, அலேகுந்தாணி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெள்ளரிக்காய் அமோக விளைச்சலை கண்டுள்ளது. 1 கிலோ ரூ.65-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.