India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தன்று கடைகள்,உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமெனில் 2சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.பணியில் ஈடுபடுத்த விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் படிவம் பெற வேண்டும் இதில் சிவகங்கை மாவட்டத்தில் 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் 11 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு புதுச்சேரி தேர்வு மைய நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடைகால நோய் பாதிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் மருத்துவ ஆலோசனை பெற 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை வராமல் கண்காணிக்கப்படுகிறது. குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் “வணக்கம் நெல்லை” கட்டுப்பாட்டு அறை எண் 9786566111 என்ற கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மதுரையில் நேற்று ( வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை, அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் டாக ( 42 டிகிரி செல்சியஸ்) பதிவானது. கடந்த 2019ம் ஆண்டு மே 29ந் தேதி மதுரையில் 42 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையில், வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நேற்று(மே 2) முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் நேற்று ஒரே நாளில், நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக போக்குவரத்துக் காவல்துறை 471 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 121 காவல்துறை வாகனங்களும் அடக்கம். முதல் நாளில் பிடிபட்டோருக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியதோடு, ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த கோனேரிப்பட்டி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை நீர் தேக்க மின் நிலையம் உள்ளது. இந்த கதவணையில் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் அணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதன்காரணமாக நீர் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதானல் காவிரி ஆறு தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.
திருவாரூர் மாவட்ட பாஜக ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரபாரிகள் கூட்டம் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி நீடாமங்கலம் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் கொரடாச்சேரி ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே மேலவிட்டுகட்டியை சேர்ந்தவர் லிட்டல்பாய் (65). இவர் நேற்று முன்தினம் சந்தைப்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் மகிளிபட்டியை சேர்ந்த தங்கதுரை என்பவர் டிவிஎஸ் XL வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்து மோதியதில் லிட்டில்பாய் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர்.
விருதுநகர் அருகே ஓ. முத்தலாபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து பாண்டித்துரை என்பவரின் வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீஸார் பாண்டிதுரையை கைது செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தோ்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனா். தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 5 போலீசார் வீதம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினா் செய்து வருகின்றனா்.
Sorry, no posts matched your criteria.