Tamilnadu

News May 3, 2024

விருதுநகர் பிளவக்கல் அணை சிறப்பு!

image

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான அணையாக இருக்கிறது பிளவக்கல் அணை. சிறப்புமிக்க இந்த அணை மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வெயிலை மட்டுமே பார்த்து வரும் கந்தக பூமி மக்களுக்கு இயற்கை வனப்புமிக்க இந்த பிளவக்கல் அணை ஒரு வரப்பிரசதமாய் விளங்குகிறது. இதன் அருகில் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த அணை ரூ.20 லட்சத்தில், 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

News May 3, 2024

கடலூர் – சேலம் ரயில் போக்குவரத்து இன்று துவக்கம்

image

கடலூர் மாவட்ட பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று கடலூர் – சேலம் பாசஞ்சர் DEMU ரயில் (06121) முதல் முறையாக இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து தொடங்கியது. இந்த ரயில் குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, ஊத்தங்கால் மங்கலம், விருத்தாசலம் வழியாக சேலம் சந்திப்பை சென்றடைகிறது. முன்பு இந்த ரயில் விருத்தாசலம் – சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 3, 2024

திருவண்ணாமலையின் வேதபுரீஸ்வரர் கோவில் சிறப்பு.

image

திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு என்ற ஊரில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில். 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய, தேவராப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். புராணக் கதைகளைக் கொண்ட இத்தலத்தில் திருஞானசம்பந்தர் பாடல்பாடி வழிபட்டுள்ளார். இத்தலத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார். 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். 9 வாயில்களைக் கடந்து மூலவரைத் தரிசிப்பது சிறப்பாகும்.

News May 3, 2024

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட மாவட்ட செயலாளர்

image

உலக பத்திரிகையாளர்கள் சுதந்திர தினம் இன்று (மே 3) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மணி பாண்டியன் இன்று (மே 3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த பத்திரிகையாளர்கள் சுதந்திர தின தினத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் சுதந்திரத்துடன் செயல்பட வாழ்த்து தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

நெல்லை: இந்த ரயிலில் விரைவில் கூடுதல் பெட்டிகள்

image

திருநெல்வேலி வழியாக திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் விரைவு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இரு மார்க்கத்திலும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த ரயிலில் பயணிகள் கோரிக்கையின்படி விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா செய்தியாளர்களிடம் நேற்று (மே 2) தெரிவித்தார்.

News May 3, 2024

மத்திய அரசை கண்டித்து கண்டன போஸ்டர்கள்

image

பாளை மகாராஜா நகர் ரயில்வே கேட்டை அடைத்து வைத்து பொதுமக்கள் பாதசாரிகள் ஊனமுற்றோருக்கு இடையூறு செய்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், மனித நேய மக்கள் கட்சி நெல்லை மாவட்டம் சார்பில் மாநகர் முழுவதும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மாநகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News May 3, 2024

அரூர்: மது விற்ற வழக்கில் 87 பேர் கைது

image

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா
தலைமையிலான போலீசார் கடந்த மாதம் முழுவதும் அரூர் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சாராயம், மதுபாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்குவிற்ற வழக்கில் 12 பெண்கள் உள்பட 87 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1,869 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், 900 லிட்டர் சாராய ஊறல் 3 டூவிலர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

News May 3, 2024

சேலம்: கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்! 3 பேர் கைது

image

சேலத்திற்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாதாகப்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியம்(33), கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணன்(21), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஸ்(23) ஆகியோர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். 3 பேரையும் கைது விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

162 நிறுவனம் மீது நடவடிக்கை

image

தேசிய விடுமுறை நாளான மே தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது கோவையில் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 78 உணவு நிறுவனங்கள் உள்பட 162 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மே.03) தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

News May 3, 2024

கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திருப்பத்தூர் டவுன் போலீசார் நேற்று பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீஸ் (24), திருப்பத்தூர் தண்ணீர்பந்தல் சரவணன்(35), சின்ன உடைய முத்துரை சேர்ந்த ஜவகர் (24). வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த நித்திஷ் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!