India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று (மே 3) நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்நிலையில் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிக்னலில் இருக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கான தோ்வு போட்டிகள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 6, 7, 8, 9, 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான தோ்வு 10ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவர்களுக்கும், 11ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவிகளுக்கும் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
உதகை அருகே மசினகுடி பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. தாவரங்கள், புல்வெளிகள் காய்ந்து நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தீவனம் இல்லாமல், தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாமல் மாடுகள் அங்குமிங்கும் அலைகின்றன. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 15 மாடுகளுக்கு மேல் இறந்தன. அங்கு ஒரு குவாரி பகுதியில் நேற்று (மே 2) மட்டும் 5 மாடுகளின் உடல்கள் கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தந்தையை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்து கைதான மகள் ஆர்த்தியுடன் 2 ஏட்டுகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்த்தியின் பிரச்னைகளை 2 போலீசாரும் தீர்த்து வைத்ததாகவும், இந்த கொலை வழக்கை நீர்த்துப் போக அவர்கள் முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட காவல்துறையினர் மேற்படி ஏட்டுகளிடம் விசாரித்து வருகின்றனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்வான வைகாசி விசாகம் பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழா வரும் மே.16 அன்று துவங்க உள்ளது. அன்று பெரிய நாயகி அம்மன் கோவிலில் காலை 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21, தேரோட்டம் மே 22 அன்று மாலை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் 104 டிகிரி தாண்டி உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 107.6 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு சாலைகள் வெறிச்சோடியது. மேலும் அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் வெப்பம் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கனூர் பாலத்தின் அடியில் இன்று(மே 3) 2 ஆண் மற்றும் 1 பெண் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் 3 சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக இன்று கோடைகால பயிற்ச்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வை அப்துல்நசிர் சொற்பொழிவாற்றி துவக்கி வைத்தார். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலாத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அப்பகுதியில் உள்ள பாரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஆலங்குடியை சேர்ந்த இளமாறன் என்கிற சிவா, அஸ்வின் உள்பட சிலர் கடந்த 28 ஆம் தேதி பாரில் பணி புரிந்து கொண்டு இருந்த ரமேஷை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நேற்று ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து சிவா, அஸ்வின் ஆகியோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.