Tamilnadu

News May 3, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

தேனி அருகே மதுராபுரி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜக்கன். இவர் தேனி – பெரியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மதுராபுரி விலக்கு அருகே பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப் ஜக்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அல்லிநகரம் போலீசார் நேற்று (மே.2) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 3, 2024

மயிலாடுதுறை: 10000 பால் குடங்கள் எடுத்து வழிபாடு

image

மயிலாடுதுறை, சேண்டிருப்பு கிராமத்தில் புகழ்வாய்ந்த சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவிரி கரையில் இருந்து சுமார் 10,000 பால்குடங்கள், அலகு காவடி, கூண்டு காவடிகளை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

News May 3, 2024

கோவையில் இருந்து 25 சிறப்பு பேருந்துகள்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மலர்கண்காட்சி வருகின்ற மே 10ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. ஊட்டி மலர்கள் காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என இன்று (மே.03) போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

News May 3, 2024

2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து

image

திண்டுக்கல் மாவட்டம் கள்ளுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (48). இவர் தரகம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் பைக்கில் அமர்ந்து கொண்டு தரகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த பைக் மோதியதில் முருகன், முருகேசன் படுகாயம் அடைந்தனர். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 3, 2024

புதுகை: திமுக தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே அமரடக்கியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தார். இந்த நிலையில் தண்ணீர் பந்தலை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை இந்த மாதம் தணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதற்காக பள்ளி வாகனங்களை  பராமரிக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

News May 3, 2024

கால்நடைகள் குறித்து அறிவுரை கூறிய அமைச்சர்

image

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை கவனமுடன் பராமரிக்க வேண்டிய கடமை அவற்றை வளர்ப்பவர்களுக்கு உள்ளது; கால்நடைகளுக்கு நாள்தோறும் 4 முதல் 5 முறை குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அப்போதுதான் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

News May 3, 2024

தஞ்சாவூர் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் சிறப்பு

image

தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோயிலில் மாரியம்மன், புற்று வடிவில் காட்சிதருகிறார். இது தஞ்சாவூர் அரண்மனைக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஒரு தீர்த்தக் குளமும் உள்ளது. சோழர் மற்றும் மராட்டிய காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். இங்கு பிரசாதமாக புற்று மண் வழங்கப்படுகிறது.

News May 3, 2024

ராமநாதபுரம்: மனைவி கண் முன் கணவர் மீது தாக்கு

image

தாமரைக்குளம் அருகே வலங்காபுரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவியுடன் அங்குள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றார். அங்கு அங்கு உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பெருங்குளத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் நடந்துவந்தார். இதனால், மணிகண்டன் மனைவி முகம் சுழித்தார். இதனை கண்டித்த மணிகண்டனை, கேதீஸ்வரன் (24) மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்படி உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 3, 2024

நெல்லை: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மரணம்

image

நெல்லை மாநகர சீவலப்பேரியை சேர்ந்த பேச்சிமுத்து நேற்று (மே 2) தனது மனைவி பேச்சியம்மாளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பேச்சியம்மாள் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!