Tamilnadu

News May 3, 2024

பயங்கர தீ விபத்து 

image

ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் காய்ந்த முள்வேலி பகுதிகளுக்கு தீ வைத்துள்ளனர். கரும்புகையுடன் தீ பற்றி எரிந்த நிலையில் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

News May 3, 2024

திண்டுக்கல் அருகே விபத்தில் 4 பேர் காயம்

image

திண்டுக்கல் தாமரைப்பாடி அருகே கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இன்னோவா கார் இன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தவர்களை நெடுஞ்சாலைத்துறை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 3, 2024

ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளுர்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜஸ்டின்(20), மோசஸ்(17). இவர்கள் இருவரும் நேற்று(மே 2) மாலை சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற கண்டெயினர் லாரி மீது மோதி ஜஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசஸ் என்பவருக்கு கை கால் முறிவு ஏற்பட்டது.

News May 3, 2024

காங்கிரஸ் முக்கிய நிர்வாகி காலமானார்!

image

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணித் தலைவர் வேல்பாண்டி இன்று (மே.3) காலை காலமானார். மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News May 3, 2024

சிதம்பரம் அருகே கார் மோதி தொழிலாளர் பலி

image

சிதம்பரம் அருகே வீரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 3, 2024

தவறான செய்தி காவல் கண்காணிப்பாளர் மறுப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே நக்கல கோட்டையில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ஒரு பெண்ணின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதனை ஒரு தொலைக்காட்சி இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

நாமக்கல் எஸ்பி அறிக்கை வெளியீடு

image

சைபர் கிரைம் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு கவனமாக செயல்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். மேலும், பரவலாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் இதுபோன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து விடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 3, 2024

90 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

image

சென்னிமலை பகுதியில் உள்ள பழக்கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ப.நீலமேகம், சென்னிமலை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 90 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

News May 3, 2024

தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

image

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் தனியார் கடையில் வாங்கிய டி.வி. ஒரு சில நாட்களில் அது பழுதானதாக அந்நிறுவனம் மீது அரியலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் டி.வி. தொகையுடன் சேர்த்து ரூ.10 ஆயிரம் இழப்பீடும் மேலும் வட்டியுடன் சேர்த்து வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

News May 3, 2024

ஜமால் முகமது கல்லூரிக்கு புதிய முதல்வர்

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் புதிய முதல்வராக ஜார்ஜ் அமலரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதே கல்லூரியில் 36 ஆண்டுகளாக கணினி அறிவியல் துறை இணை பேராசிரியராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் அமலரத்தினத்திற்கு கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான டாக்டர் ஏ கே காஜா நஜிமுதீன், பொருளாளர் எம்ஜிஆர் ஜமால் முகமது ஆகியோர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!