Tamilnadu

News May 3, 2024

நாமக்கல்: வாடிக்கையாளர் நலனுக்காக நிழல் வலை 

image

அக்னி வெயில் 4ம் தேதி தொடங்குகிறது. அதிலிருந்து பாதுகாத்து கொள்ள நாமக்கல் நகர மக்கள் தயாராகி வருகின்றனர்.இதனை ஒட்டி நாமக்கல் கடை வீதியில் வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பாக தென்னை ஓலையில் வேயப்பட்ட படலங்கள் மற்றும் நிழல் விலைகளையும் அமைத்து வருகின்றனர்.இதனால் தங்கள் கடைக்கு வரும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதால் பொது மக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

News May 3, 2024

புதுகை: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து, துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

News May 3, 2024

தென்காசி: அதிமுக நீர்மோர் விநியோகம்

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் இன்று ராஜாங்கபுரம் கிளை அதிமுக பொதுமக்களுக்கு நீர் மற்றும் நீர்சத்து பழங்கள் வழங்கப்பட்டன.அதிமுக விவசாய அணி துணைச் செயலாளர் ராசு ஒன்றிய செயலாளர் கணேசன், லட்சுமி பாண்டியன், நடராஜன், மைதீன், நாலாயிரம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

News May 3, 2024

பாஜக மாவட்ட தலைவர் மீது பரபரப்பு புகார்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திராநகர் பகுதியில் வசித்து வரும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பிவி வரதராஜன் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் மீது தனக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனால் பாஜ கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News May 3, 2024

திருச்சியின் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன்!

image

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில், காவேரியின் வடகரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் புராண பெயர்களாக கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றழைக்கப்பட்டன. இக்கோயில் புராண கதை வரலாற்றைக் கொண்டது. 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோயிலாக இந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் கருதப்படுகிறது. மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருவது சிறப்பானது.

News May 3, 2024

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 528 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது 300க்கும் மேற்பட்ட ஏரிகளில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதனால் வரும் சொர்ணவாரி பருவ விவசாயத்திற்கும், இந்தாண்டு குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News May 3, 2024

வாராந்திர காவத்து பயிற்சி – பார்வையிட்ட மாவட்ட எஸ்பி

image

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மோப்ப நாய் படை பிரிவினர்கள் கொண்டு வெடிப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டறியும் ஒத்திகை நிகழ்ச்சி காவலர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. அதனை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மோப்ப நாய் பயிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
கவாத்து பயிற்சியின் போது அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள் அப்போது, ஆயுதப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்

News May 3, 2024

வெயிலால் நிழல் தேடும் பசு மாடுகள்

image

புதுவையில் நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் தொப்பி, கண்ணாடி போன்றவற்றை அணிந்து செல்கின்றனர். அந்த வகையில் கால்நடைகளும் அடிக்கிற வெயிலுக்கு இரை தேடாமல் நிழலை தேடி  பசு மாடுகள் அலைகின்றன.

News May 3, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

image

நாகப்பட்டினம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை செயல்படுத்த தடையாக உள்ள நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில் குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும், பொது மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாக குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும்‌ முன்னாள் எம்எல்ஏ-வுமான வீ.மாரிமுத்து பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

News May 3, 2024

கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில்  2023–2024 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாணாக்கர்களின் நலன் கருதி கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள்  வருகின்ற மே.7 முதல் மே.17 வரை சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (மே-3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!