India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் மே.7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரியில் இதுவரை இல்லாத அளவு உட்சபட்ட வெப்ப அலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.03), மாவட்டம் முழுவதும் காற்றுடன் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 கிலோமீட்டர் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.
வேலூர் ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று நீட் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையா, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வருவாய் கோட்டாட்சியர்கள் கவிதா (வேலூர்), சுபலட்சுமி (குடியாத்தம்), துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார், தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி, கச்சராபாளையம் அடுத்த வடக்கனந்தல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-1990 ஆண்டுகளில் மேல்நிலை வகுப்பு படித்த முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 34 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் புத்தக அலமாரிகள் நன்கொடையாக வழங்கினர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி மகளிர் கலை கல்லூரியில் வைக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 256 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் கூடுதலாக 8 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேட்டூரில் கடந்த ஆண்டு நீர் இருப்பை விட இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் அணையை தூர்வாரினால், அணையின் நீர் கொள்ளவை அதிகரித்து, தென்மேற்கு பருவமழை காலங்களில் கூடுதலாக நீரினை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம் 30 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
புழல் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் மாற்றியினை இயக்கத்திற்கு கொண்டு வர தேவையான பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(மே 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல் முழுவதும், சூரப்பட்டு முழுவதும், விநாயகபுரத்தில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். மதியம் 2 மணிக்கு மேல் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
விருத்தாசலம் வர்த்தகர்கள் நல சங்க தலைவர் கோபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வணிகர் தினம் மதுரையில் வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கிறது. எனவே இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அனைத்து வர்த்தகர்களும் தங்களது குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.