Tamilnadu

News May 3, 2024

மதுரை கூடலழகர் கோவில் சிறப்பு!

image

மதுரையில் அமைந்துள்ள கூடலழகர் கோவில் 108 திவ்ய வைணவ தேசங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம், பரிபாடலிலும் மூலவரை குறிப்பிட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், அஷ்டாங்க விமானம், எட்டுப் பிரகாரங்களுடன், இக்கோயில் உள்ளது. சைவம் வைணவமும் ஒரே மதம் தான் என்பதை காண்பிக்கும் வகையில் புராணக்கதை படி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுவது உலகப்புகழ் பெற்றதாகும்.

News May 3, 2024

விழுப்புரம்: எம்பி ரவிக்குமார் ஆட்சியர் சந்திப்பு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 6 சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் இயங்காததை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விளக்கம் கோரினார். ஆட்சியர் மின்னழுத்தம் தான் காரணம் என்று விளக்கம் அளித்ததாக ரவிக்குமார் தெரிவித்தார்.

News May 3, 2024

ஆசிரியர் குடும்பத்திற்கு உதவிய ஒய்வு IAS அதிகாரி

image

ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலசந்திரன் 60 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலில் 7, 8 வகுப்பு படித்தபோது ராமசாமி என்ற தமிழ் ஆசிரியர் பாடம் எடுத்துள்ளார். ஆசிரியர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த பாலச்சந்திரன், நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரியர் மனைவிக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தியும், பேரனுக்கு மாடு வாங்க ரூ.45,000பணம் கொடுத்து உதவியுள்ளார்.

News May 3, 2024

அமராவதி முதலைப் பண்ணை

image

திருப்பூாில் அமைந்துள்ளது அமராவதி முதலைப் பண்ணை இந்தியாவின் மிகப்பொிய முதலைகள் பாதுகாப்பு பண்ணையாகும். அமராவதி நீா்த்தேக்கத்தின் சுற்றுப்புற வனப்பகுதிகளிலிருந்து முதலை முட்டைகள் சேகாிக்கப்பட்டு முதலைப் பண்ணையில் அடைகாக்கப்பட்டு பொறிக்கப்படுகின்றன. பல வளா்ந்த முதலைகள் இங்கிருந்து நீா்த்தேக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பொழுது இங்கே 98 முதலைகள் வளா்க்கப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகின்றன.

News May 3, 2024

விழுப்புரத்தில் திடீரென பழுதான கேமராக்கள்

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது வாக்கு பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு திடீரென இன்று (மே 3) யுபிஎஸ் பேட்டரிகள் பழுதானதால், சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News May 3, 2024

திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.02), திருப்பத்தூரியில் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News May 3, 2024

தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்

image

தருமபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதின் இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியர்கள் வில்சன் ராஜசேகர், காயத்ரி, மருத்துவம்
மற்றும் ஊரக நலப்பணிகள்
இணை இயக்குநர் சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், வெடி மருந்து குடோன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

45 அடி உயர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்

image

திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் அங்காளம்மன் கோயிலில் 45 அடி உயரத்தில் பிரமாண்ட முனீஸ்வரர் சிலைக்கு இன்று(மே 3) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பகுதி செயலாளர் அருள் தாசன், மாமன்ற உறுப்பினர்கள் தம்பையா சொக்கலிங்கம் உள்ளிட்ட 1,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News May 3, 2024

குமரி: மினி பஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

image

குமரி மாவட்டம் கோட்டார் போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்ரின் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் மினி பஸ் ஒன்று வந்தது. இதன் டிரைவர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கினார். இதனை கண்ட போலீசார், மினி பஸ்சை நிறுத்தி டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News May 3, 2024

ஈரோடு: கோவில் கடைகளில் ரூ.4.70 கோடி வாடகை பாக்கி

image

ஈரோடு நகர் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 46 கடைகள் உள்ளன. இதில் 39 கடை ஒப்பந்ததாரர்கள் ரூ.4 கோடியே 70 லட்சம் வாடகை செலுத்தாமல், பாக்கி வைத்துள்ளனர். எனவே கடந்த 3 மாதமாக வாடகை நிலுவை தொகை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!