Tamilnadu

News May 3, 2024

நாகப்பட்டினம் : பூம்புகார் வரலாறு !!

image

காவேரிபூம்பட்டினமான பூம்புகார், முன்காலத்தில் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இந்த ஊர் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடமாகும். இது குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பழைய பூம்புகார் நகரம் கடலுகுள் சென்றதாகவும், அதன் காலம் 15,000 ஆண்டுகளாகவும் இருக்கும் எனக் கண்டறியப்பட்டது. இதன் ஆய்வுகளில் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 3, 2024

சேலம் மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு

image

சேலத்தில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியே செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவு தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் உப்பு சர்க்கரை கரைசல் நீரை குடிக்கலாம் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News May 3, 2024

மனைவி இறந்து தூக்கம் தாளாமல் கணவன் தற்கொலை

image

பெரம்பலூர், கொளப்பாடி கிராமத்தில் சேர்ந்த நடராஜன்- சோலையம்மாள் தம்பதி. சோலையம்மானுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின் வலி தாங்க முடியாமல் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த கணவர் நடராஜன் துக்கத்தில் மருந்து குடித்து இறந்து விட்டார். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.

News May 3, 2024

அம்மாபேட்டை: பக்தர்களுக்கு எச்சரிக்கை!

image

ஈரோடு, அம்மாபேட்டை பகுதியில் பாலமலை உள்ளது. இந்த மலை சேலம் மாவட்டம், மேட்டூர் வனசரகத்திற்கு உட்பட்டது. இந்நிலையில், இம்மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சித்தரை மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.எனவே மலை ஏறும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, மது அருந்தவோ, புகை பிடிக்கவோ, குப்பைகளை போடவோ கூடாது என வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

தென்காசி; ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

image

தென்காசி மாவட்டம் மேலநீலத நல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார், இவரது மனைவி கஸ்தூரி. 7 மாத கர்பிணி என்பதால் ஊருக்கு சென்று வளைகாப்பு நடத்துவதற்காக சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் ரயிலில் நேற்று இரவு வந்துகொண்டிருந்தார். அப்போது வாந்தி வந்ததால் படிகட்டில் நின்று வாந்தி எடுத்த போது தவறி கீழே விழுந்து பலியானார். கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 3, 2024

தர்மபுரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.02), தர்மபுரியில் ஓரிரு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News May 3, 2024

புதுச்சேரியின் உள்ள ஸ்ரீ ஆரபிந்தோ ஆசிரமம்

image

ஸ்ரீ அரபிந்தோ அசிரமம் ஒரு ஆன்மீக மையமாகும். அரசியல், பத்திரிக்கையாளராக இருந்த அரவிந்தர் 1920 ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு வந்து ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1926 ஆல் அவரின் ஆசிரமம் உருவாக்கப்பட்டு, 1934 இல் பெரிதாக வளர்ச்சியைக் கண்டது. இந்த ஆசிரமத்தில் 400 க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பக்தர்கள் வாழ்கின்றனர். தற்போது சுற்றுலா பயணிகளும் ஆன்மீகவாதிகளும் இவ்விடத்திற்கு வந்து செல்கின்றனர்.

News May 3, 2024

தி.மலை: 35 பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல்

image

தி.மலை மாவட்டத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 35 பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கரைசலை பொதுமக்கள் பருகி வெப்பம் தொடா்பான நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று தெரிவித்துள்ளாா். அதன்படி,தி.மலை, செங்கம், செய்யார், வந்தவாசி, ஆரணி, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் அமைக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

கிருஷ்ணகிரி எஸ்பி முக்கிய தகவல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கல் விற்பனை, விபச்சார தொழில் உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரியவந்தால், 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி மூலமோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் இரகசியம் காக்கப்படும் என்று கிருஷ்ணகிரி எஸ்பி தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

விழுப்புரத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடம் வேலை செய்யாததால் பரபரப்பு உண்டானது.மேலும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் யூ.பி.எஸ்-ல் ஏற்பட்ட மின்தடை சரிசெய்யப்பட்டு சிசிடிவி கேமராக்கள் செயல்பட தொடங்கியது என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!