Tamilnadu

News May 3, 2024

கோவை: கேஎப்சி சிக்கனில் ஸ்டீல் கம்பி 

image

கோவையை சேர்ந்த சுதாகர் என்பவர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். மனைவி, இரு குழந்தைகள் கோவை சிங்காநல்லூரில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சுதாகரின் மனைவி நேற்று அப்பகுதியில் உள்ள பிரபல கேஎஃப்சி உணவகத்தில் 4 சிக்கன் வகைகளை ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்த போது ஸ்டீல் கம்பி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார்.

News May 3, 2024

கோவில் திருவிழாவில் மோதல்- 14 பேர் கைது

image

உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும், மாணிக்கம் என்பவருக்கும் நில தகராறு காரணமாக முன்பகை இருந்துள்ளது. நேற்று கோவில் திருவிழா மஞ்சள் நீராட்டு விழாவின் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கைகலப்பாக மாறி இருதரப்பும் கம்பு கற்களால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் 8 பேர் காயமடைந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

News May 3, 2024

பெரம்பலூர் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா!

image

சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. இதனால் கடலுக்கடியில் இறந்த உயிரினங்கள் புதைபடிவமாக மாறிப் போயின. பூக்கும் தாவரம் தோன்றுவதற்கு முந்தை காலத்தை சேர்ந்த 18 மீட்டர் நீளம் கொண்ட மரம் கல்லுருவமாகியுள்ளது.

News May 3, 2024

திருவாரூர்: ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹர்பன் பேங்க் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் முனைவர். ராஜ கணேசனுக்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களை போட்டித் தேர்விற்கு தயார் செய்ததை பாராட்டும் விதமாக ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் சார்பிலும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

News May 3, 2024

நெல்லையில் 106 டிகிரி வெப்பம் பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (மே 3) மதிய நிலவரப்படி நெல்லை மாநகரில் 106 டிகிரி ஃபாரண்ஹிட் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

News May 3, 2024

காட்பாடி விஐடியில் பி.டெக் சேர்க்கை

image

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை https://ugresults.vit.ac.in/viteee”, “www.vit.ac.in.”என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம். விஐடியின் நுழைவுத் தேர்வில் முதல் இடத்தை அரியானாவை சேர்ந்த ரூபிந்தர் சிங், 2-ம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த் பானு மகேஷ் செக்குரி பிடித்துள்ளனர்.

News May 3, 2024

யாருக்கெல்லாம் இ – பாஸ் தேவை இல்லை

image

வருகிற மே7 ம் தேதி முதல் நீலகிரி செல்ல இ – பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்து உள்ள நிலையில், யாருக்கெல்லாம் இ-பாஸ் தேவையில்லை என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளி மாவட்ட பதிவு எண் கொண்டு நீலகிரியில் பயன் படுத்தி வரும் வாகனம், மற்றும் நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

திருவள்ளூர்: முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டு

image

திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (27). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவரிடம் கடன் தவணை தருவதாக திருவள்ளூர் அடுத்த ICMR பகுதிக்கு வர வைத்து முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பியுள்ளது. ஆபத்தான நிலையில் அஜித் குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

News May 3, 2024

புதுச்சேரி: மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

சென்னையில் உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹேம சந்திரன் மறைவிற்கு காரணமான மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு புதுச்சேரி அரசின் சார்பில் வலியுறுத்த கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் மற்றும் இளைஞர் குடும்பத்தினர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

News May 3, 2024

மயிலாடுதுறை: மாணவர்களுக்கு நற்செய்தி

image

சீர்காழியில் மாணவ பேச்சாளர்களை உருவாக்கும் முயற்சியாக ஜேசிஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் “வெற்றி பெற பேசு” எனும் தலைப்பில் ஒரு நாள் மேடை பயிற்சி முகாம் மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சீர்காழி பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முன்பதிவு செய்து பங்கேற்று தங்களது மேடை பேச்சு திறனை வளர்த்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!