Tamilnadu

News May 3, 2024

ஊட்டிக்கு நாளை முதல் 25 கூடுதல் பஸ்

image

அக்கினி வெயில் நாளை காலை 9.30 க்கு தொடங்குகிறது. இதை தொடர்ந்து, மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள கோத்தகிரி, கோடநாடு, குன்னூர், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இதனால், ஏற்கனவே இருக்கும் வழித்தட பேருந்துகள் போதியதாக இல்லை. இதை கருத்தில் கொண்ட மாநில போக்குவரத்து துறை கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 3, 2024

கள்ளக்குறிச்சியின் தும்பராம்பட்டு குகை!

image

கல்வராயன் மலைத்தொடரில் உள்ள தும்பராம்பட்டு கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது தும்பராம்பட்டு குகை. குகைக்கு செல்லும் வழியில் தொட்டிமடுவு என்னும் சிற்றோடு இயற்கையோடு அமைந்துள்ளது. மிகச்சிறிய குகையான இதில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் பொரிக்கப்பட்டுள்ளது. மனிதன், வேட்டைநாய், காளைமாடு உருவங்களும், மக்கள் நடனமாடுவது போன்ற உருவங்களும் பாறையில் பொரிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

வெயிலில் மயங்கி விழுந்து இளைஞர் பலி

image

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே இன்று (மே.3) வெயிலில் இளைஞர் சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானார். சிங்கி குளத்தைச் சார்ந்த இளைஞர் ஐகோர்ட் ராஜா(35) காடுவெட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடும் வெயிலால் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்த அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 3, 2024

மயிலாடுதுறை: டேனிஷ் கோட்டை வரலாறு!

image

தரங்கம்பாடி அருகே வங்கக் கடலை ஒட்டியுள்ள டென்மார்க்காரர்களால் கட்டப்படது டேனிஷ் கோட்டை. இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1620 இல் கட்டப்பட்டது. 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.

News May 3, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தேர்ச்சி

image

விழுப்புரம் மாவட்ட முகாம் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு அரசு தேர்வு இயக்ககம் மூலம் நடத்தப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்திட்டம் தேர்வில் தேர்ச்சி பெற்ற விழுப்புரம் 04 மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் இன்று வழங்கினார்.

News May 3, 2024

திண்டுக்கல்: மாணவிகளுக்கு தேனீ வளர்ப்புப்‌ பயிற்சி

image

தோப்புப்பட்டியில் உள்ள தேனீ வளர்ப்புப் பண்ணையில் செம்பட்டி ஆர்.வி.எஸ் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் அயல் மகரந்த சேர்க்கை, தேனை பிரித்தெடுத்தல், நோய் நிர்வாகம் பற்றியும் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் வரும் பாதிப்புக்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

News May 3, 2024

புதுச்சேரி: முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு

image

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.8000 மழைக்கால நிவாரண உதவியாக ரூ.6000 என ஒவ்வொரு மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் புதுவையில் தமிழகத்தை விட குறைந்த மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் போல் இங்கும் மானிய உதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்தார்.

News May 3, 2024

காங்கேயத்தில் புத்தகத் திருவிழா

image

காங்கேயம் நகரத்தில் நகர ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

News May 3, 2024

சிறுவன் நுரையீரலில் சிக்கிய பல்ப் அகற்றம்

image

சென்னை: போரூர் பகுதியைச் சேர்ந்த 5-வயது சிறுவன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எல்.யி.டி பல்பு ஒன்றை தவறுதலாக விழுங்கிவிட்டார். இதனையடுத்து அச்சிறுவனக்கு தொடர்ந்து மூச்சுத் திணறலும், தொடர் இருமலும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ததில், நுரையீரலில் பல்ப் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறிய பல்ப்பை அகற்றினர்.

News May 3, 2024

அரியலூர் கோதண்டராமசாமி கோயில் கட்டடக்கலையின் சிறப்பு!

image

கோதண்டராமசாமி கோயிலில் தசாவதார மண்டபம் எனப்படும் 20 அடி உயரமுள்ள 10 தூண்கள் உள்ள நான்கு வரிசை கொண்ட பரந்த மண்டபம் கோயிலில் உள்ளது. இதில் 6.6 அடி உயரமுள்ள விஷ்ணுவின் 10 அவதாரங்கள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. 90 அடி உயரமும் 6 அடுக்குகளும் உள்ள கோபுரம் முன்பகுதியில் உள்ளது. கோபுரத்தின் அடித்தளம் சுண்ணாம்பு கற்களாலும், மேற்பகுதி செங்கல் சுண்ணாம்புக்கலவையாலும் கட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!