Tamilnadu

News May 4, 2024

கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு

image

மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம்,  கைவினை பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் இன்று மதியம் 2 மணிக்கு கைவினை பொருட்கள் குறித்த கருத்தரங்கம் மடீட்சியாவில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் கைவினை பொருட்களை தரமாக உற்பத்தி மற்றும் விற்பனை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த கருத்தரங்கில் கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

சேலம்: மனைவி பிரிந்த ஏக்கத்தில் தற்கொலை!

image

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளியில் புது மனைவி தன்னை பிரிந்து கல்லூரி விடுதிக்கு சென்ற ஏக்கத்தில், கட்டட தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் மாயமான நிலையில் நேற்று(மே 3) இவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

இ.எஸ்.ஐ காப்பீட்டார்களின் கவனத்திற்கு!

image

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் மற்றும் சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் காப்பீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் 2024-2025 கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், பி.எஸ்.சி நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இ.எஸ்.ஐ.காப்பீட்டாளர்களின் வாரிசு என்ற சான்றிதழ் பெற www.esic.gov.in என்ற இணையத்தில் வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு 0452 2531074 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்

News May 4, 2024

நிச்சயம் மீண்டும் நடிப்பேன்-எம். பி உறுதி!

image

மதுரை விமான நிலையத்தில் நேற்று எம் பி விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் மோடியின் பேச்சுகளும், நிலைப்பாடுகளும் மாறி வருகிறது. 400 இடங்கள் என்று சொல்லிய நிலையில் தற்போது ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக உள்ளதால் மக்களிடம் வெறுப்பு, பிரிவினையை கொண்டு வர அவர் இப்படி பேசுவதாக தெரிவித்தார். மேலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என தெரிவித்தார்

News May 4, 2024

ஊட்டி மலர் கண்காட்சி கட்டணம் உயர்வு

image

ஊட்டி பூங்காவில் 126வது மலர் கண்காட்சி மே 10ல் தொடங்குகிறது. கடந்த ஆண்டு கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News May 4, 2024

கட்டுக்குள் வந்தது வனத்தீ

image

முதுமலை, மசினகுடி சிங்கார வனப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீ மூன்று நாட்களுக்கு பின் கட்டுப்படுத்தப்பட்டது. நேற்று, காலை வனத்தீ  ஏற்பட்ட பகுதிகளில் வன ஊழியர்கள் தண்ணீர் கேன்களுடன் ஆய்வு செய்து, மரங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில்‌, தீ ஏற்பட்ட பகுதியில் கடுமையான வறட்சி மற்றும் சரிவான மலைப்பகுதி என்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது என்றனர்.

News May 4, 2024

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாணவர்கள்

image

சிங்கப்பூரில் நடைபெற்ற 137 “செஞ்சில் ஸ்ட்ரீட்” எனும் இடத்தில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஶ்ரீ பதஞ்சலி யோகா பயிற்சி மையம் மாணவி ரிதண்யா தங்கப்பதக்கம் வென்றார் இந்தியா, அமெரிக்கா நேபாளம், பூட்டான், ஸ்ரீலங்கா, மலேசியாவைச் சேர்ந்த 400 பேர் பங்கேற்றனர். தமிழக மாணவர்கள் 5 இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

News May 4, 2024

ஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பில் மாபெரும் போட்டிகள்

image

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேருராட்சியில் அமைந்துள்ள ராணி மஹாலில் ஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பில் மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் பல்வேறு போட்டிகள் இ‌ன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பரமன் பச்சைமுத்து கலந்து கொண்டு “பிள்ளை வளர்ப்பு” குறித்து உரையாடினார்.இ‌தி‌ல் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News May 4, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சி வரும் 12ஆம் தேதி நிறைவு

image

கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கோடைக்கால நீச்சல் வகுப்பு கடந்த 30ஆம் தேதி துவங்கியது. இந்த நீச்சல் வகுப்பு வரும் 12ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நீச்சல் வகுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 4, 2024

திருச்சி அருகே லட்சக்கணக்கில் மோசடி 

image

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.அதை நம்பி 13 லட்சத்து 15, 500 ஐ முதலீடு செய்தார்.முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.கொடுக்க மறுக்கவே சைபர் கிராம் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!