India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கோவில்பட்டி நிலையத்தில் இருந்து சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில், தீயணைப்பு வீரர்களுக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கி பாராட்டினார். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ். ஜேசிஐ நிர்வாகிகள் வெங்கடேஷ் ,சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நாளை வணிகர்கள் தினத்தை வியாபாரிகள் கொண்டாடும் பொருட்டு ஆண்டு தோறும் விடுமுறை அளித்து வருகின்றனர். சிறு வியாபாரிகள், பெரிய வியாபாரிகள் அனைவரும் நாளை விடுமுறை அளித்து வணிகர் தினத்தை கொண்டாட வேண்டுமாறு வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் சத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வி கேஸ் ஐயப்பன் இவரின் மகன் தீபக் சாரதி சென்னை அருகே கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மே தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற போது உயிர் இழந்தார். இவரது உடல் நேற்று இரவு உடுமலை கொண்டுவரப்பட்டு மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் எம்பி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மே 4) தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி பள்ளபட்டியை சோ்ந்த ராஜபிரபு (29) என்பவர் மூலம் தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் மதுரையை சேர்ந்த இராணுவ வீரரான குறலரசன் என்பவர் ரூ.6 லட்சம் பங்கு முதலீடு செய்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக கடந்த மார்ச் 29ஆம் தேதி ராஜபிரபுவை, குறலரசன் உள்ளிட்ட 4 போ் வழிமறித்து வேனில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் குறலரசன் உள்ளிட்ட 4 பேரை நேற்று (மே 3) கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகள் முழுவதும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் தட்பவெட்ப நிலை மாற்றத்தின் காரணமாக கோடை காலம் துவங்கி. இன்று கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் அதிகப்படியான வெப்பம் 120 டிகிரிக்கு மேலாக அடித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தபோதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருக்க மாட்டார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுவை துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் தனது உயிரை இழந்த ராணுவ வீரருக்கு எனது சார்பாகவும் புதுச்சேரி மக்கள் சார்பாகவும், வீரவணக்கமும் அஞ்சலியும் செலுத்துகிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.
குன்னூர் நகரத்திற்கு கோடை கால சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை பயன்படுத்துகின்றனர். வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை வணிகர் தினத்தை விடுமுறை இன்றி கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை குன்னூர் வியாபாரிகள் பொதுநல சங்க செயலாளர் எம்.ஏ.ரகீம் தெரிவித்தார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமானதை தொடர்ந்து உவரி அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று (மே 4) சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.