India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் நான்கு பேர் பணியிட மாற்றம். மதிச்சியம் காவல் ஆய்வாளர் வேதவல்லி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா, மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்து கொள்ள வசதியாக மே 15 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். *நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நேருஜி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் 36 இவர் நேற்று காலையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மகேந்திரன் தீராத முதுகு வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவர் எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்தது .தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய கோவில் நிகழ்வுகள், திருவிழாக்கள்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம்,
▶️சாத்தூர் பிரமோர்ச்சவம் , சித்திரா பெளர்ணமி விழா
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா
▶️விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா
▶️வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் திருவிழா
▶️அருப்புக்கோட்டை சொக்கநாதசுவாமி கோவில் திருவிழா
▶️திருச்சூழி பிரமோர்ச்சவம்
நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
தொழிலாளர் தினமான மே மாதம் 1-ம் தேதி, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மே 1-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளிலும் மே.1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சிகளில் 1.4.2024 முதல் 31.3.25 வரை முடியவில்லை காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட வரவு செலவின் மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்து காண்பித்து முதல் பெறுதல் போன்றவை நடைபெறும். இதில், அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-28) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வருகிற மே.1ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதையும், அரசு நலத்திட்டங்களை குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
அரியலூர் மாவட்டத்தில் கிராவல், மண், தீக்களிமண், லைம்கங்கர் மற்றும் இதர சிறுவகை கனிமங்களின் குவாரி குத்தகை உரிமங்கள் இணையவழி முறையில் வழங்குவதற்கான நடைமுறையானது வருகிற ஏப்.30-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://mimas.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.