Tamilnadu

News May 4, 2024

குமரி: மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் பலி

image

குமரி, பளுகல் பகுதியில் உள்ள வீட்டில் AC பழுதாகி உள்ளது. இதனை சரிசெய்ய இன்று இளைஞர் ஒருவர் தனது நண்பனுடன் சென்ற நிலையில், பழுதை சரி செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில், இந்த இளைஞர் காட்டாத்துறையை சேர்ந்த அஸ்வின் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பளுகல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

குமரியில் அழகிய மாத்தூர் தொட்டிப்பாலம்!

image

குமரி, மாத்தூரில் உள்ள தொட்டிப்பாலமானது 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஆசியாவின் மிக உயரமான மற்றும் மிக நீளமானதாகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 6 அங்குல அகலமும் கொண்டது. இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. அருகில் சிறுவர் பூங்காவும் உள்ளது.

News May 4, 2024

திருவள்ளூரில் ஆரஞ்சு அலர்ட்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

தேனி: இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை

image

தேனியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் பணத்தை இழந்ததால், இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போடி அருகே ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த தனவந்தன் (26). இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகமான முதலீடு செய்ய பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு, ரூ.53 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

News May 4, 2024

திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 4, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 4, 2024

திருவாரூர்: 25 % இலவச சேர்க்கை விண்ணப்பிக்க

image

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 % இலவச சேர்க்கைக்கு மே.20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். rte.tnschools.gov.in இந்த இணைய தளம் மூலமாகவோ அல்லது மாவட்டத்தில் உள்ள கல்வி துறையின் அலுவலகங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்கான முடிவுகள் மே.27 ஆம் தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News May 4, 2024

தர்மபுரி பிணித்தீர்க்கும் தீர்த்தமலை கோயில்!

image

தர்மபுரியில் உள்ள தீர்த்த கிரீஸ்வரர் கோவில் அரூர்-திருவண்ணாமலை சாலையில் 17 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது.

News May 4, 2024

திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 4, 2024

விழுப்புரத்தில் மஞ்சள் அலர்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!