Tamilnadu

News June 9, 2024

கோவை: 144 இடங்களில் 232 மையங்கள்

image

கோவை மாவட்டத்தில் 144 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 232 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் அன்னூர் மேட்டுப்பாளையம் என மொத்தமாக பல மையங்களில் 69,737 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும். இதற்காக 13 பறக்கும் படைகள், 94 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News June 9, 2024

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சி பசுமைப் பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட், மற்றும் பல்வேறு பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணபட்டது. மாலை நேரத்தில் கொடைக்கானலில் அதிகமான குளிர் நிலவியது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, செய்து மகிழ்ந்தனர்.

News June 9, 2024

நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் காரணமாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் வருகின்ற 10ம் தேதி முதல் வழக்கம் போல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். 

News June 9, 2024

வாழப்பாடி அருகே குட்கா கடத்தல்

image

சேலம், வாழப்பாடி அருகே நெடுஞ்சாலை பகுதியில் வாழப்பாடி போலீசார் வாகன சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தலைவாசல் வரகூர் மருதையான் மகன் சிவபாலன் ( 35 ) என்பவர் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருளை வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து சிவபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News June 9, 2024

விலங்குகள் ஆம்புலன்ஸில் பணிபுரிய பணி ஆணை வழங்கல்

image

தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு விலங்குகள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்காக தேர்வு மாவட்ட மேலாளர் தலைமையில் நேற்று (ஜுன்.8) நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டுனர் பணிக்கு 30 பேரும், உதவியாளர் பணிக்கு 65 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

News June 9, 2024

கடலூரில் கிரிக்கெட் போட்டி தொடக்கம் 

image

கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட கிரிக்கெட் அகாடெமி கோப்பைக்கான மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15.6.2024 அன்று தொடங்கி 22.6.2024 வரை நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 8.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கு என 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இவை அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

News June 9, 2024

கன்னத்தில் அறைந்தவருக்கு தங்க மோதிரம்

image

சமீபத்தில், சண்டிகர் விமான நிலையத்தில் CISF பெண் காவலரான குல்விந்தர் கவுர் என்பவர் மண்டி தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவம் தற்போது பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், CISF காவலர் குல்விந்தர் கவுர்-க்கு, பெரியார் படம் பொறித்த தங்க மோதிரத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் பரிசாக அறிவித்துள்ளது. மேலும், குல்விந்தர் கவுருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகிறது

News June 9, 2024

11 பேர் டெபாசிட் தொகை திரும்ப பெறலாம் 

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் 11,51,209 வாக்குகள் செல்லத்தக்கவை.  இதில் 1/6 வாக்குகளுக்கு மேல் 1,91,868 வாக்குகள் பெற்ற திமுக, அதிமுக, பாமக வேட்பாளர்கள் மற்றும் வேட்பு மனுவை திரும்ப பெற்றவர்கள், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் என்று மொத்தம் 11 பேர் டெபாசிட் தொகை ரூ. 25 ஆயிரம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

மாணவர்களுக்கான சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது

image

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 07.06.2024 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 13.06.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News June 9, 2024

பெண்ணாடம் பாலம் இணைப்பு பணிகள் ஆய்வு

image

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு – பெண்ணாடம் வெள்ளாறு மேம்பாலம் இணைப்பு பணிகள் குறித்து சாலை இணைப்பு போராட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளாற்று மேம்பாலத்தின் பணிகள் மிகவும் மெத்தனமாக நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து வரும் 20 ஆம் தேதி அனைத்து கட்சியினர், பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சாலை இணைப்பு போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

error: Content is protected !!