India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர், திங்களூர் ,கேர்மாளம் ஊராட்சிக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 3 வது நாளாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் இந்த மின்தடையால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிபட்டு வருகின்றனர். இதையடுத்து துண்டிக்கப்பட்ட மின்கம்பியை விரைந்து சீர்செய்து மின்சாரம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேவாரம் திருவாசகம் சிவபுராணம் பாடி சங்கு ஊதும் போது கனக சபையில் சலசலப்பு ஏற்பட்டது. நடராஜர் கோவிலில் கனக சபை மீது தமிழ் தேவார பாடசாலை நிறுவனர் சேலம் சத்யபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடினர். அப்போது இடையூறு ஏற்படுத்தியதாக தீட்சதர்கள் சார்பில குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சத்தியபாமா உள்ளிட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
ஓஎம்ஆர் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் மணிகண்டன். நேற்று பட்டினப்பாக்கம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் இவரை 4 பேர் சரமாரி தாக்கினர். இதில் ஈடுபட்ட 3 பேரை பட்டினபாக்கம் போலீசார் கைது செய்த நிலையில் ஆயுதப்படை காவலர் கோபிநாத் தாக்குதலில் ஈடுபடாத காரணத்தினால் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகியும், மாமல்லபுரம் பேரூராட்சி 2 வது வார்டு கவுன்சிலருமான த.சீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கவின். இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ்.போஹன்கர் ‘ஜிமிக்கி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிதி ஏற்கெனவே ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகை அதிதி இன்று ‘ஸ்டார் ‘ பட ப்ரோமோஷனுக்காக மதுரை வந்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை (மே 5) நடைபெறவுள்ளது. இதில் 250 பேர் உட்பட மாதிரிப்பள்ளியில் 82 மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 5 மையங்களில் தேர்வு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், மனைவி அனுசுயா (84). இவருக்கு கடந்த 2 மாதங்களாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் பூரண குணமடையவில்லை என மனம் உடைந்து காணப்பட்டவர் நேற்று மதியம் வீட்டில் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி- பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் உள்ள கடைகள் மற்றும் நகரில் பல கடைகளில் குட்கா பொருள், புகையிலை, ஹாண்ட்ஸ் புகையிலை போன்றவற்றை மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில கடைகளில் குட்கா பொருள்களை பேப்பரில் மறைத்து கொடுத்து விற்பனை செய்கிறார்கள். மேலும், 20 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை 50- ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டார் பட்டியலை சேர்ந்தவர் வேல்முருகன் (45). இவர் மது போதையில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகினார். இதுகுறித்து தகவல் அறிந்த
தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் வல்லத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சி பிளாஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் சஹான் அகமது முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
Sorry, no posts matched your criteria.