Tamilnadu

News May 5, 2024

திண்டுக்கல் அருகே விபத்து

image

திண்டுக்கல் திருச்சிரோடு கல்லறை தோட்டம் அருகே நேற்று இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து  திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 4, 2024

காங்கிரஸ் தலைவர் உடல் நல்லடக்கம் அறிவிப்பு

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் இன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நல்லடக்கம் நாளை 10:00 மணியளவில் கரைசுத்துபுதூர் கிராமத்தில் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

News May 4, 2024

தலைவர் குறித்து எஸ்பி பரபரப்பு பேட்டி

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் இன்று (மே.4) சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம், ஜெயக்குமார் மரண வாக்குமூலம் எழுதிய கடிதம் எனக்கு வரவில்லை என கூறினார்.

News May 4, 2024

கூட்டு பலாத்கார வழக்கில் 8 பேருக்கு குண்டாஸ்

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் சிறையில் உள்ள மூலனூர் அதிமுக நிர்வாகி தினேஷ் (27), வெள்ளகோவில், பிரபாகர் (32), மணிகண்டன் (29), தமிழ்செல்வன் (எ) சதீஸ் (28), நவீன்குமார் (26), நந்தகுமார்(30), பாலசுப்பிரமணி (30), மோகன்குமார் (30) ஆகிய 8 பேர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

News May 4, 2024

மின்சாரம் தாக்கி இளைஞர்கள் இருவர் பலி

image

செங்கம், மேல்வணக்கம்பாடி கிராமத்தில் நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அலங்கார விளக்குகள், பந்தல் போடப்பட்டிருந்தது. விழா முடிந்த நிலையில் இன்று பிற்பகல் மின்விளக்குகள், சீரியல் செட்டுகள் மற்றும் பந்தலை பிரித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்களை மின்சாரம் தாக்கியது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 4, 2024

வாக்குப்பதிவு அறைகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாதுகாப்பு அறைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலருமான வளர்மதி, காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோர் இணைந்து இன்று பார்வையிட்டு அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

News May 4, 2024

கப்பல் போக்குவரத்து சேவை குறித்த ஆலோசனை கூட்டம்

image

நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து எதிர்வரும் மே.13 முதல் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த கப்பல் புறப்படும் நேரம், பயணம் கட்டணம் குறித்து எடுத்துரைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்திய வர்த்தகத் தொழிற் குழுமத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கப்பலை இயக்க உள்ள தனியார் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

News May 4, 2024

மயிலாடுதுறை கடலோர பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து 1.5 மீட்டருக்கு கடல் அலை வீசக்கூடும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

குறவர் இன மக்களை தாக்கிய நபர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த குறவர் இன மக்களின் வீட்டை ஜேசிபி மற்றும் அடியார்களுடன் சென்று இடித்து சேதப்படுத்தி வீட்டின் உரிமையாளர் காந்தா என்பவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தாக்கிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

News May 4, 2024

கடையடைப்பு போராட்டம் வாபஸ்

image

தங்கச்சிமடம் ஊர் நல கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ஊராட்சி தலைவர் குயின்மேரி முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் உதவி மின்பொறியாளர் தலைமை வகித்தார். வர்த்தகர் சங்கம், பொதுமக்கள் அறிவித்த மே 7 கடையடைப்பு போராட்டத்தை 1 மாதம் தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
வர்த்தகர் சங்க நிர்வாகிகள் நிஜாமுதீன், வல்லப கணேசன், மைதீன், ஊர் நல கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி பங்கேற்றனர்.

error: Content is protected !!