Tamilnadu

News May 5, 2024

மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு

image

மண்டபம் மீனவர் நலத்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கடலில் 45 – 65 கிமீ வேகத்துடன் காற்று வீசும். கடல் கொந்தளிப்பால் 1.5., உயரத்துக்கு அலை எழக்கூடும். இதனால்
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும், கடலில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம். காற்று வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

கடலூர் அருகே அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

image

கடலூர், செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை செடல் பிரமோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செம்மண்டலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News May 5, 2024

மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

போச்சம்பள்ளி நகர் அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (மே 5) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்படும் இந்த அரிய வாய்ப்பினை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் நியமனம்

image

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தியார் தனது கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் சங்கராபுரம் வட்டம் மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓவியர் பாபு என்பவரை நியமனம் செய்துள்ளார் இதனை அடுத்து கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் சிறப்பாக பணியாற்றுவேன் என்று கூறி வாழ்த்து பெற்றார்.

News May 5, 2024

செங்கல்பட்டில் ஆரஞ்சு அலர்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 5, 2024

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

image

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஊராட்சி பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை அரசு மருத்துவர் சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதில் ரத்த அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை நடத்தப்பட்டது.

News May 5, 2024

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோயிலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

News May 5, 2024

இருளில் மூழ்கிய 10 கிராமங்கள்

image

வாணியம்பாடி அருகே அம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. கோடை வெயிலில் தற்போது மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூந்நிலை நிலவியது. இதனால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று மாலை 3 மணி முதல் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

News May 5, 2024

குளவி கடித்து 2 பேர் பலி

image

கோவையை சேர்ந்த ராஜசேகர், கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேர் கோத்தகிரி பக்கம் ஹாடதொரை பகுதிக்கு இன்று சென்று உள்ளனர். அங்கு கூடு கட்டியிருந்த குளவிகள் இவர்களை துரத்தி கடித்து உள்ளது. இதில் ராஜசேகர், கார்த்திகேயன் ஆகியோர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 7 பேர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

News May 5, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நீட் தேர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே 5) நீட் தேர்வை மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ் டிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தமாக 5005 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மதியம் 2 மணிக்கு தொடங்கும் இத்தேர்வு மாலை 5: 20 வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்பது தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!