India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்யாணமகாதேவி ஊராட்சி அணைக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கினார் இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் ஆவலோடு பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில் நீலகிரியில் இன்று காலையில் இதமான காற்றோடு சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி குழந்தைகள் தற்காப்பு உடைகளை அணிந்து பள்ளிக்கு ஆனந்தமாக துள்ளி குதித்து சென்றனர்.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை திருமலை சமுத்திரத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தனர். ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு நடைபெறும் இந்த முகாமினை விவசாயிகள் பயன்படுத்தி கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மதுரை ஆதினம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடி நேற்றைய தினம் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அதற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள். சீமானும் அண்ணாமலையும் அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் ஒரே ஒரு குறை தான், இலங்கைத் தமிழர்களை கொன்றவர்களுக்கு ( திமுக, காங்கிரஸ் கூட்டணி) ஓட்டு போட்டுள்ளனர்” என்றார்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி கிழக்கு தெரு தண்ணீர் டேங்க் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகேசன் (48), சக்திவேல் (57), கலியமூர்த்தி (45) சக்திவேல் (32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 2 சீட்டு கட்டுகள், ரூ.34285 பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் நகராட்சி புதிய கடற்கரையில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரமன்ற தலைவர் மாரிமுத்து உறுப்பினர் ஜோதிலட்சுமி , நகராட்சி அலுவலர்கள் , தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது
கடந்தாண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நடிகர் விஜய், இந்தாண்டும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளார். தவெக சார்பில் வழங்கபட உள்ள
இதில், 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஜூன் 28ல் கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக இன்று கோவையில் தவெக நிர்வாகிகள் கூறினர்.
பூங்காவனம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பாக நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள், ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் விக்ரமன், அன்பால் அறம் செய்வோம் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலமாக மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு ஆதார் பதிவு செய்யும் முகாமை துவக்கி வைத்தார்
கோவில்பட்டி முத்தையா மால் தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக இன்று காலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நகராட்சி தொடக்கப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை நற்பணி இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமையில் நற்பணி இயக்கத்தை சேர்ந்த கண்ணன் பள்ளி சீருடைகளை வழங்கினார். நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், மதிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.