Tamilnadu

News June 11, 2024

திருச்சி அருகே பள்ளியில் ஐம்பெரும் விழா

image

தொட்டியம் அருகே பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் விழா, நூலக திறப்பு விழா, மரக்கன்று நடும் விழா, இலவச பாடப்புத்தகம் வழங்கும் விழா, இலவச ஆதார் மைய துவக்க விழா, ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா ராணி முன்னிலை வகித்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

News June 11, 2024

வேலூர்: கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

image

குடியாத்தம் காந்திநகரில் உள்ள அரசு கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (ஜூன் 10) அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூர்யா (26), தமிழரசன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

News June 11, 2024

ராம்நாடு: பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு

image

மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணாக்கர் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு துவக்க விழா நேற்று (ஜூன் 10) நடந்தது. மண்டபம் பேரூராட்சி ராஜா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மகேஸ்வரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண் குழு உறுப்பினர் சைவ.சரவணன், உதவி தலைமை ஆசிரியர் அக்சல்யா, ஆசிரியர்கள்
ஜெயக்குமார், இருதய ஆரோக்யமேரி, ரமேஷ் (உடற்கல்வி) இப்பணியில் ஈடுபட்டனர்.

News June 11, 2024

சேலம்: செக் மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறை!

image

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்று காசோலை கொடுத்துள்ளார். பணம் கொடுக்காததால் 2022 ஆம் ஆண்டு ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், செக் மோசடி வழக்கில் அபராதத்துடன் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி ஆத்தூர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் தீர்ப்பு வழங்கினார்.

News June 11, 2024

ராணிப்பேட்டை: மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்!

image

ராணிப்பேட்டை கலெக்டர் ச.வளர்மதி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(ஜூன் 10) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளின் நலத்துறையின் மூலம் 3 பேருக்கு நவீன செயற்கை கால் வழங்கினர். இந்நிகழ்வில் சுரேஷ், உதவியாளர்
மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணண் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

மயிலாடுதுறை:வருவாய் தீர்வாயம் நாளை தொடக்கம்

image

சீர்காழி தாலுகாவில் உள்ள கிராமங்களில் 1433 பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனும் ஜமாப் பந்தி நாளை 12ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலையில் பல்வேறு கிராமங்களின் வரவு செலவு கணக்குகள் இந்த தீர்வாயத்தில் சரி பார்க்கப்படுவதோடு , கிராம மக்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு சான்றுகள் வழங்கப்படும்.

News June 11, 2024

திருவள்ளூர்: இங்கு மின்தடை அறிவிப்பு

image

திருத்தணி கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள்: நெட்டேரி கண்டிகை, கிருஷ்ணசமுத்திரம், இஸ்லாம் நகர், ஆர்.வி.என்.கண்டிகை, புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

News June 11, 2024

நீலகிரியில் பச்சை வண்ண பட்டாம் பூச்சிகள்

image

முதுமலை வரும் பயணிகள் வன விலங்குகள், பறவைகள் மட்டும் அல்லாமல் பட்டாம் பூச்சிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போதைய சீசனில் பச்சை வண்ண பட்டாம் பூச்சிகள் கூட்டம், கூட்டமாக வர தொடங்கி உள்ளன. இந்த பட்டாம் பூச்சிகள் ஈர மண்ணில் உள்ள உப்பு சத்தை உட்கொண்டு, மழை வருவதற்கு முன்பு வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன.

News June 11, 2024

போடி: ஜூன் 12ல் ஜமாபந்தி

image

போடிநாயக்கனூர் அருகே, சோலையூர் கிராமத்தில் ஜூன் 12ஆம் தேதி ஆட்சியர்  தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. போடி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் ஆட்சித் தலைவரிடம் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா இன்று தெரிவித்துள்ளார்.

News June 11, 2024

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாக கூட்டரங்கில், நேற்று(ஜூன் 10) நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கை அவையங்களை, மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

error: Content is protected !!