India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் போது, பணி செய்யும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கார்டு ஒன்றுக்கு 50 பைசா வழங்கப்படுகிறது. அதனை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும். ஞாயிறன்று பணியாற்றும் ரேஷன் பணியாளர்கள் மாற்று விடுமுறை எடுக்க அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை திரு இந்தளூர் ஊராட்சியில் உள்ள பல்லவராயன் பேட்டையில் அமைந்துள்ள சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிட பள்ளியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி மாணவ செல்வங்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏ வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு வழங்கினார்.
விருதுநகர், துலுக்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இன்று காலை திருச்சி ஆட்சியரகம் முன்பாக மக்கள் உரிமை கூட்டணியின் சார்பில்
மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 10 குளங்களை காவேரி ஆற்று தண்ணீரை கொண்டு நிரப்பி நீர்நிலைகளை பாதுகாக்க கோரி அந்த இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முஹம்மது காசிம் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூகநீதி பேரவை, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
தென்காசி, நடு பல்பு சிக்னலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்று செல்கின்றன.இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இந்த சிக்னலில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் நிற்க கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்றி நிரந்தரமாக மழை நீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் , நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் இன்று முதல் வருகிற 27-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதற்கு தனித் துணை ஆட்சியர் ரமா தலைமை தாங்கினார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார். இதையடுத்து பொதுமக்கள் குடும்ப அட்டை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.
2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதிற்கான தகுதியாளர்களை தேர்வு செய்யவதற்கான நாமினேஷன் உரிய படிவத்தில், கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மற்றும் விளம்பரத் துறைக்கு 31.07.2024 முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்விருத்திற்கென புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினரால் தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவர்
ஜூன் 14-ம் தேதி முதல் மாஞ்சோலையில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் தடை செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று (ஜூன் 11) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 2028-ம் ஆண்டு வரை உரிமம் இருப்பதால் மாஞ்சோலையில் குடிநீர், மின் இணைப்பு தடை செய்யப்படாது என உறுதி அளித்தார்.
தூத்துக்குடியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு வேன் பிரச்சார இன்று(ஜூன் 11) துவங்கியது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.