Tamilnadu

News May 6, 2024

காருக்குறிச்சி: மண்பானை விற்பனை ஜோர்

image

கோடை வெயில் கொளுத்தும் நிலையில் மண்பான பொருட்கள் தயாரிப்பில் பிரசித்திப்பெற்ற சேரன்மாதேவி அருகே உள்ள காருக்குறிச்சியில்,  மண்பானை தொழில் களைக்கட்டியுள்ளது. இங்கு விதவிதமான மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு தமிழக மற்றும் இன்றி கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ஆர்டர் கொடுக்கப்பட்டு வாங்கி செல்வதாக இதை தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News May 6, 2024

காஞ்சிபுரம்: அதிகாலை 4 மணி அளவில் இடியுடன் மழை

image

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக காந்தி சாலை, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், பூ கடை சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(மே 6) காலை 4 மணி அளவில் காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 6, 2024

+2 மாணவர்களே இதை செய்யுங்கள்

image

வேலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

+2 மாணவர்களே இதை செய்யுங்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வை மாணவ மாணவியர் எழுதியுள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை பார்க்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எனவே வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளில் அறிந்து கொள்ளலாம்.

News May 6, 2024

ஆயிரம் விளக்கு: சிறுமியை கடித்துக் குதறிய நாய்கள்

image

சென்னை, ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் பணிபுரிபவர் காவலாளி ரகு. இவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகள் சுதக் ஷா உடன் ஒரு சிறு அறையில் வசித்து வருகிறார். நேற்று(மே 5) ரகு வெளியே சென்ற நிலையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சுதக் ஷாவை, பூங்கா அருகே வசிக்கக்கூடிய புகழேந்தி என்பவரின் 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 6, 2024

காங். தலைவர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார்(60) மர்மமான முறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 7 தனிப்படையை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அவர் உறவினர்கள் வழங்கிய கடிதங்கள் மற்றும் இறந்து கிடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான மர்ம நீடிக்கிறது.

News May 6, 2024

நெல்லை: தொடரும் அலைகளின் சீற்றம்!

image

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று(மே 6) நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் எனவும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

News May 6, 2024

சென்னை: தொடரும் அலைகளின் சீற்றம்..!

image

தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று(மே 6) சென்னை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை அதீத சீற்றத்துடன் காணப்படும் எனவும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.

News May 6, 2024

சேலம்: பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்த இளைஞர்!

image

சேலம், வீரகனூர் அருகே வெள்ளையூரை சேர்ந்த இளைஞர் கோவிந்தராஜ்(23). இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திய நிலையில், ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் மே 2ம் தேதி தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(மே 5) உயிரிழந்தார். வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 6, 2024

கணவரால் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை காலணி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் மனைவி மீனாட்சி (44). இவரின் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மனவிரக்தியில் இருந்த மீனாட்சி வீட்டில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை.

error: Content is protected !!