India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் அரியலூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கிருஷ்ணகிரியில் உள்ள பைரவர் சுவாமி ஆசிரமம் ஒரு ஆன்மீக மையமாக செயபட்டு வருகிறது. 2013இல் தொடங்கப்பட்ட இந்த நிலையம், பைரவ சுவாமி என்பவரால் தொடங்கப்பட்டது. இது, கடவுள் பக்தி, பூஜைகள், திருவிழாக்கள் போன்றவையை எடுத்துரைக்கிறது.இந்த நிலையம், கந்திக்குப்பம் அருகே அடர்ந்த காட்டில் ஸ்ரீ பைரவநாதர் கோயில் உள்ளது. மக்கள் பலரும் இந்த அசிரமத்திற்கு வருகை புரிகின்றனர்.
நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா வணிகவியல் பொருளியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே பள்ளி மாணவி தாமரைச்செல்வி கணினி பயன்பாடுகள் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று உள்ளார். மாணவிகளையும் பயிற்றுவித்த ஆசிரியைகளையும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்
ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை, வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாய் கடித்து படுகாயமடைந்த மாநகராட்சி பூங்கா காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து நாய்களின் உரிமையாளர் புகழேந்தி நேற்று(மே 5) கைது செய்யப்பட்ட நிலையில இன்று அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் +2 தேர்வு எழுதிய 15 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில்
536 மதிப்பெண்கள் பெற்று சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் முதலிடம் பிடித்தார். 532 மற்றும் 506 மதிப்பெண்கள் பெற்று அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அருண்குமார் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற சிறைவாசிகளை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் உடன் உள்ள சிறைவாசிகள் பாராட்டி, வாழ்த்தினர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் இன்று காலை சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும்”ரங்கா ரங்கா” என கோஷம் முழங்க பக்தர்கள் அனைவரும் நம்பெருமாலை வழிபட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸாரும் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து +2 தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவிகள் -18,416; தேர்ச்சி பெற்ற மாணவ மணவிகள் – 17,228; தேர்வு எழுதிய மாணவர்கள் – 8,904; மாணவர்கள் தேர்ச்சி – 8,161; தேர்வு எழுதிய மாணவிகள் – 9,512; தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 9,067; மாணவர்கள் சதவிகிதம் – 91.66%; மாணவிகள் சதவிகிதம் மொத்தம் – 96.32% என மொத்தம் 93.55% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 91.06% சதவீதமும், இந்த ஆண்டு 92.91% சதவீதம் கடந்த ஆண்டு 30 வது இடத்தை பெற்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னேறி, தற்போது 29 வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதகுந்தது
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.42 ஆகும். இதில் 9,864 மாணவர்கள், 11,362 மாணவிகள் என மொத்தம் 21,226 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,540 மாணவர்கள், 11,138 மாணவிகள் என மொத்தம் 20,678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்கள் 96.72%, மாணவிகள் 98.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கோவை மாவட்டத்தில் 96.97% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.71 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 98.01 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது
Sorry, no posts matched your criteria.