Tamilnadu

News May 6, 2024

அரசு பள்ளியில் 95.59 % தேர்ச்சி  

image

நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3917 மாணவர்களும், 4301 மாணவிகளும் தேர்வு எழுதினர்.

54 அரசு பள்ளிகளில் 2323 மாணவர்களும், 2214 மாணவிகளும் என மொத்தம் 4537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2199 மாணவர்களும், 2138 மாணவிகளும் என மொத்தம் 4337 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 ஆகும்.

News May 6, 2024

திண்டுக்கல், மனதை மயக்கும் மன்னவனூர் ஏரி!

image

திண்டுக்கலில் கொடைக்கானலைப் போல் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ரகசிய பூம்பாறை உள்ளது. அந்த அடந்த காடுகள் நிறைந்த கிராமத்தில் ஒரு மலையேற்றப்பாதையின் முடிவில் மன்னவனூர் ஏரி அமைந்துள்ளது. இந்த நன்னீர் ஏரி மலைகள் சூழ்ந்த பரந்த இடத்தில் இருக்கும். பிக்னிக் செல்ல அருமையான இட அமைப்பைக் கொண்டுள்ளது. பசுமை நிறைந்த மன்னவனூர் கிராமத்தில் அழகு அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும்.

News May 6, 2024

நாட்றம்பள்ளி அரசு பள்ளியில் 100% தேர்ச்சி

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வெளியான பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதன் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

News May 6, 2024

+2 RESULT: காஞ்சிபுரம் 30வது இடம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 12,541 பேர் முடிவுக்காக காத்திருந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 92.28% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.46% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம் 30வது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.

News May 6, 2024

திருச்செந்தூர் அரசு பள்ளி 100 % தேர்ச்சி

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் முதல் மதிப்பெண்ணாக 537 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

News May 6, 2024

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி

image

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி E. S. W. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தன்யா ஸ்ரீ என்பவர் 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இன்று முதலிடம் பிடித்த மாணவியை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 95.40 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. அதில் மாணவர்கள் 93.46%, மாணவியர்கள் 96.98 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

சேலம்: 351 பேர் நீர் தேர்வுக்கு வரவில்லை!

image

நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று(மே 5) நடந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் 11,144 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 24 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது. காலை 11 மணியில் இருந்து தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவிகளை கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 351 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

News May 6, 2024

சேலம் மாவட்டத்தில் 34,908 பேர் தேர்ச்சி!

image

தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள், 18856 மாணவிகள் என 34,908 பேர் தேர்வு எழுதினர். இதில் 14,824 மாணவர்கள் 18,198 மாணவிகள் என மொத்தம் 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.35 சதவீதம் மாணவர்கள், 96.51 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 6, 2024

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிறப்புகள்

image

திருக்கச்சியேகம்பம் என பழைய சமய நூல்களில் குறிப்பிடப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தேவாரம் பாடலில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். பஞ்சதலங்களில் ஒன்றான இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது. பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை இங்கு திருப்பணி செய்ததற்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றன. இத்தலம் மிகவும் தொன்மையான வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.

News May 6, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பெரம்பலூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

error: Content is protected !!