India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இதுவரை 1371 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 22 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 180 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல்
தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை
கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்பொழுது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கை தர உள்ளார்கள். அந்த அறிக்கையை வைத்து அதற்கு ஏற்றவாறு பணிகளை செய்ய தயாராக உள்ளோம்.பிரச்சினைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . 10 நாட்களுக்குள் அறிக்கை வாங்கப்பட்டு, அதற்கேற்றார் போல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற திமும துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா ஜூன் 16ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அப்போது திமுக சார்பில் குன்னூரில் காலை 11 மணி, உதகையில் பகல் 12 மணி, கூடலூரில் மாலை 4 மணியளவில் ஆ.இராசாவுக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்தார்.
இராமநாதபுரத்தில் Unimoni Financial Services Ltd எனும் அந்நியச் செலாவணி மற்றும் பணப் பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் தனது புதுப்பிக்கப்பட்ட கிளையைத் துவங்கியது. இதனை தலைமை மக்கள் அதிகாரி ரத்தீஷ் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மண்டல தலைவர் கார்த்திகேயன், கிளை மேலாளர் கார்த்திக்ராஜா முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி சீனிவாசன். இவர் நேற்று தொலைபேசி வாயிலாக திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. திருப்பத்தூர் பிரஸ் கிளப் சார்பில் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் அதிமுக நிர்வாகியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் – திருச்சி ரோடு மேம்பாலம் அருகே கீர்த்தி கபே கடையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த காலாவதியான பன், பிரட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று காலாவதியான பொருட்கள் வைத்திருக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜுன் 13) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் சேத்தியாத்தோப்பில் உதவி ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி சேருவதற்கான உதவிகள் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.