Tamilnadu

News June 14, 2024

மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்

image

வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று மேயர் பிரியா தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை பயன்பாட்டிற்கான உபகரணங்களை ஸ்கூல் (SCHOOL) தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா. கணபதி மாநகராட்சி ஆணையர் உடன இருந்தனர்.

News June 14, 2024

மாணவர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியருக்கான பள்ளி விடுதிகள் 27, கல்லூரி விடுதிகள் 8 என 35 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய பள்ளி மாணவ மாணவிகள் வரும் 14ம் தேதிக்குள், கல்லூரி மாணவர்கள் வரும் ஜூலை 17க்குள் விடுதி காப்பாளர்களிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு.

News June 14, 2024

தென்காசி போலீசாருக்கு குவியும் பாராட்டு

image

தென்காசி மாவட்ட போக்குவரத்து போலீசாரின் துரிதமாக செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இலத்தூர் விலக்கில் நேற்று நடந்த சாலை விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் அனுப்பி வைத்துவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 மற்றும் 7 வயதுடைய 2 குழந்தைகளை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.

News June 14, 2024

வேடசந்தூர்: தக்காளி விலை உயர்வு

image

வேடசந்தூர் மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.100 எட்டியது. கடந்த வாரம் பெய்த மழையால் தக்காளி பயிர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேடசந்தூர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் 20 கிலோ கொண்ட பெட்டி ரூ.700 முதல் 900 வரை விற்பனையானது. நேற்று 20 கிலோ கொண்ட பெட்டி ரூ.1,500 முதல் 2,000 வரை விற்பனையானது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனையாகிறது

News June 14, 2024

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

image

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தனியாா் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் நேற்று (ஜூன்.13) தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்கள் தங்களுக்கு காலதாமதமின்றி மாத ஊதியம், பணப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

News June 14, 2024

தூத்துக்குடி: நாளை சிறப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் புதிய குடும்ப அட்டை கோருதல் குடும்ப அட்டையில் பெயர் முகவரி மாற்றுதல் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை

image

திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் ஷோகோ நிறுவனத்தின் செயல் அதிகாரி பத்மஸ்ரீ. ஸ்ரீதர் வேம்பு ஆலோசனையின் பெயரில் ஷோகோவின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை இன்று நடைப்பெற்றது.
இதில் ஷோகோ நிறுவனத்தின் நிர்வாகிகள் கீர்த்தி வாசன், செளந்தரராஜன், பிரபாகரன், சரவணன், திட்டச்சேரி பேரூர் அமைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜா, மற்றும் பொறியாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்

News June 14, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக பாட்னாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாட்னா – மங்களூரு இடையே வரும் 15, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், பாட்னாவில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

News June 14, 2024

குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு

image

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் கடைகளில் பணிபுரிகின்றனாரா என்று பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் கடைகள் (ம) கல்குவாரிகள் போன்ற இடங்களில் சோதனை செய்ததில் கவுல்பாளையத்தில் ஒரு கடையில் பணியமர்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.

News June 14, 2024

சென்னையில் பிளாஸ்டிக் கண்காட்சி

image

சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கண்காட்சி இன்று முதல் ஜூன் 17 வரை நடைபெற உள்ளது. 6ஆவது முறையாக நடைபெறும் இக்கண்காட்சியில், பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பதற்கான இயந்திரங்கள், அச்சுகள், வார்ப்புகள், துணைப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்வையிடுவார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

error: Content is protected !!