India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் கீழ் இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு அசோக் நகர் பகுதியில் நிலத்தடி நீர் குழாய் சரிபார்த்து சின்டெக்ஸ் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் சின்டெக்ஸ் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
தர்மபுரி அருகே மொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சாந்தி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கழிவறை செல்வதற்காக வெளியே வந்தபோது 2 நபர்கள் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 47 ஆயிரம் பணம் மற்றும் சாந்தியின் கழுத்திலிருந்த 7.5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர் . இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்
விசாரிக்கின்றனர்.
மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான C.மகேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் பக்தர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அன்னதானம் வழங்கினார்.
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் 8-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியன், ஆட்டோ டிரைவர், மனைவி ஆனந்தி. முனியன் சரிவர ஆட்டோ ஓட்ட செல்லாமல் மதுகுடித்து விட்டு தினமும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்தி நேற்று மதியம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் மனைவி பேச்சியம்மாள் (18). இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பேச்சியம்மாள் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து டிஎஸ்பி மாயவன் தலைமையிலான சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 7) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இறப்பு தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நெல்லை எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து வெயில் வாட்டி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வெப்பத்தில் இருந்து வாகனை ஓட்டிகளை பாதுகாக்கும் விதமாக பெரம்பலூர் காமராஜர் வளைவுப் பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர் சார்பாகவும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் நெல்லை ஆட்சியர் இன்று (மே 7) ஆய்வு செய்தார். இடையன்குடியில் நடந்த கால்டுவெல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிறகு நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் திசையன்விளைக்கு சென்றார். அப்போது அங்குள்ள பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அவருடன் அப்பகுதியை சேர்ந்த பல்துறை அதிகாரிகளும் சென்றனர்.
திருச்சி தமிழ்நாடு பார்மா டிஸ்ட்ரிபியூஷன் அசோசியேஷன் சார்பில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஜிஎஸ்டி பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.மாநிலத் தலைவர் சிதம்பரம் தலைமையில் பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்க அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம் துணைத் தலைவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சேலத்தைச் சேர்ந்த மூத்த வரி ஆலோசகர் ஆடிட்டர் ராஜ பாலு கலந்துகொண்டு ஜிஎஸ்டி பற்றி பேசினார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் திருநங்கை நிவேதா ஆகியோரை தமிழக முதலமைச்சர் இன்று நேரில் அழைத்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.