Tamilnadu

News May 7, 2024

பாண்டிச்சேரி பாறை கடற்கரை சிறப்புகள்!

image

பாண்டிச்சேரியிலுள்ள அழகிய ராக் பீச் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இந்த கடற்கரையில் நடைபயிற்சி செய்யவும் கடலின் அழகை ரசிக்கவும் சிறந்த இடமாகும். மற்ற கடற்கரை போன்று மணல் கரைகள் இருக்காது. இதில் கரை முழுவதும் பாறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தூய்மையான கடற்கரையில் இதுவும் ஒன்றாகும். இங்கு, 1.2 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலம் கடலினுள் செல்லும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

image

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

News May 7, 2024

பால்குடம் எடுத்த பக்தர்கள் தரிசனம்

image

செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மாச்சார் அம்மன் ஆலய 24 -ஆம் ஆண்டு பிரஹ்மோத்தவ திருவிழா இன்று நடைபெற்றது. திருவிழாவில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

News May 7, 2024

பரமக்குடி ஒன்றியத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

image

பரமக்குடி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குழாய் அமைக்கும் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழில்கள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News May 7, 2024

கெத்து காட்டிய  அரசு பள்ளி மாணவர்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் குறிப்பாக 54 அரசு பள்ளிகளில் மட்டும் 2,323 மாணவர்களும், 2214 மாணவிகளும் ஆக மொத்தம் 4,537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2,199 மாணவர்களும், 2138 மாணவிகளும் என மொத்தம் 4337 பேர்  தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

 கிக் பாக்ஸிங்கில் மாணவர்கள் சாதனை

image

இந்தியன் அமைச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு பல்கலை., உள்ளரங்கத்தில் மே 3,4, 5 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இதில், போடி, தேனி காம்பாக்ட் கிளப் மாணவ மாணவிகள் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்றன.ர் தங்கம் வென்ற வீரர்கள் ஜூன் மாதம் கல்கத்தா சிலிகுறிச்சியில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். 

News May 7, 2024

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் 510 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு,515 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இதனிடையே வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதாகவும்,மீன்பிடிக்காலம் தொடருவதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாலும் முட்டை விலை உயர்வடைந்துள்ளது

News May 7, 2024

கடலூரில் 100 நாள் வேலை கேட்டு மனு

image

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,கடலூர் ஊராட்சி பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலை கொடுக்கப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடியாக வேலை வழங்குமாறு மனுவில் கூறியிருந்தனர்.

News May 7, 2024

கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

image

ஊத்தங்கரை பகுதியில்
கடுமையான கத்திரி வெயிலுக்கு மத்தியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, பெரிய தள்ளப்பாடி,
அனுமன் தீர்த்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

News May 7, 2024

நாங்குநேரி மாணவனுக்கு உறுதியளித்த அமைச்சர்

image

தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் மாணவன் சின்னதுரை உயர்கல்விக்கு அனைத்து வகையிலும் ஏற்கனவே கூறியபடி நான் துணை நிற்பேன் என்று உறுதிப்படுத்தி உள்ளார். கல்வி மட்டுமே சமத்துவம் வளர மிகப்பெரிய ஆயுதம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!