Tamilnadu

News May 8, 2024

புதுக்கோட்டையில் மழை பெய்யுமா?

image

பதுகையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் அளவானது 20 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வந்தது.இதனைத் தொடர்ந்து புதுகையில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் கடந்த வார்த்தை காட்டிலும் அதிகமாக 20 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி வரை இருக்கும் என்று அத்துடன் அதிகமான வெப்பம் காரணமாக மிதமான 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

News May 8, 2024

கடலூரில் பிரபல ரவுடி கைது..!

image

கடலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிக அளவில் கஞ்சா புழக்கம் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் இந்த தகவலை பரப்பிய பெண்ணாடம் சோழ நகரை சேர்ந்த ரவுடி கார்த்திகேயன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.எனவே இதுபோன்று தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 8, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழை

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

News May 8, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது

image

திருப்பூர், மங்கலம் அடுத்த சாமலாபுரத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாட்சா (30). இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று இரவு இவருடைய காரில் வட மாநிலத்தைச் சேர்ந்த (38) வயது பெண்ணும், 15 வயது சிறுமியும் வந்துள்ளனர். அப்போது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் இன்று சிக்கந்தர் பாட்சாவை கைது செய்தனர்.

News May 8, 2024

தி.மலையில் அதிகாரிகள் ஆய்வு

image

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.30.15 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை மேற்பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News May 8, 2024

தென்காசியில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில பகுதிகளில் மாலை இரவு நேரங்களில் மெல்லிய தென்றல் காற்று வீச தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் வெப்பம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா அறிவித்துள்ளார். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகளில் மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News May 8, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா ஆளுநர்

image

பெங்களூரிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் செல்லும் வழியில், கிருஷ்ணகிரி பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை புரிந்த மாண்புமிகு கர்நாடக ஆளுநர் திரு. தவார் சந்த் கெலாட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று 08.05.2024 மலர் கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை உள்ளார்.

News May 8, 2024

மண்டபம் படகுகள் கள ஆய்வு: அதிகாரி தகவல்

image

மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளுக்கு மே 31, நாட்டுப்படகுகளுக்கு
ஜூன் 11ல் நேரடி ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த 2 நாட்களில் ஆய்வுக் குழுவினரிடம் விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் அனைத்து ஆவணங்களையும் தவறாமல் நேரடியாக காண்பிக்க வேண்டும் என மண்டபம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

அண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்த தம்பி

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவருடைய தம்பி தேவேந்திரன். சிவக்குமார் இவருடைய தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக தெரிந்துகொண்ட தேவேந்திரன் பட்டப்பகலில் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்து விட்டு பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 8, 2024

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் கணவர் சடலமாக மீட்பு

image

கோட்டக்குப்பம் அமீது நகரை சேர்ந்தவர் முகமது பாரூக் (50). இவரது மனைவி வகிதாபானு கோட்டக்குப்பம் 12ஆவது வார்டு கவுன்சிலராக சுயேட்சையாக வெற்றி பெற்று பின்னர் திமுகவில் இணைந்தார். முகமது பாரூக் சின்ன கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் பார்ம் ஹவுஸில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவரது அறையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!