India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் நேற்று முதல் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் மீனவர்களின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும் வெளி மாநில மீனவர்களை அழைத்து செல்ல கூடாது இந்திய கடல் எல்லையை தாண்டக்கூடாது அடையாள அட்டை படகு உரிமம் உயிர் காப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் இரட்டைமடி வலை பயன்படுத்த கூடாது என மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
குமரி அறிவியல் பேரவை சார்பில் 2024-2025-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரம்பரிய கலைநுட்பங்கள் பற்றிய ஆய்வு நிகழ்ச்சியாக இளம் விஞ்ஞானி மாணவர்கள் குமரி அறிவியல் பேரவை தலைவர் வேலையன் தலைமையில் வைரவன்பட்டி பகுதியில் இன்று (ஜூன்-16) ஆய்வு மேற்கொண்டனர்.
குளித்தலை லாலாபேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்கள் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜீன்.20 பாலக்காடு – திருச்சி ரயில் கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
சின்னமூட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 மாத இடைவெளிக்கு பிறகு கடலுக்குசென்ற விசைப்படகு மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் சிக்காததால் ஏமாற்றமடைந்தனர். ஏலக்கூடத்தில் மீன்களின் வரத்து குறைந்த நிலையில் மீன்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோழிச்சாலை ஒரு கூடை ரூ.3,500க்கும், பாறைமீன் ஒரு கூடை ரூ.4,500க்கும் ஏலம் போனது நவறைமீன் கிலோ 300க்கும், தோல்கிளாத்தி கிலோ 250க்கும் விற்பனையானது.
மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 காலை 7:00 முதல் 7:40 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் எனவும் பயிற்சிகள் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவதாசை 99941 23091ல் தொடர்பு கொள்ளலாம் என காந்தி மியூசிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு புதுச்சேரியில் இன்று பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி உப்பளம் நேதாஜி நகர் இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஏழு மையங்களில் நடைபெற்று வருகிறது இரு வேலை நடக்க உள்ள இந்தத் தேர்வில் சுமார் 2578 பேர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது தியாகம் இரக்கம் நன்றி உணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இது போன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றது என்றார்
சிவகாசி மாநகராட்சி பகுதிகளான திருத்தங்கல் பேருந்து நிலையம், எம்எல்ஏ அலுவலகம், பழைய விருதுநகர் சாலை, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டது. இந்த ஆவின் பாலகம் ஒரு நாள் கூட செயல்படாமல் தற்போது வரை பூட்டியே கிடப்பதாக கூறும் பொதுமக்கள் இதனால் ஆவின் நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என புலம்புகின்றனர் .
பெரம்பலூர் மாவட்டத்தில் 1433 ஆம் பசலிக்கான ஜமாபந்தி குன்னம் தாலுக்காவில் ஆட்சியர் தலைமையிலும் பெரம்பலூர் தாலுக்காவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் , வேப்பந்தட்டை தாலுக்காவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்காவில் சார் ஆட்சியர் தலைமையிலும் வரும் ஜூன்18 முதல் ஜூன்27 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிகால் கூட்டம் மூலமாக காவல் டெல்டா சிறப்பு திருவாரூர் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் ரேஷ்மி ராணி ஆய்வு செய்தார். இதில் சிவராம சுந்தரி ஓடை, பாசிமுத்தா ஓடை கவரப்பட்டு வாய்க்கால் அனைத்து பணிகளையும் சிறப்பாக நடைபெறுகிறதா என்று அதிகாரியிடம் ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.