India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலாடி அருகே கன்னிராஜபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 1995 முதல் 1999 கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நரிப்பையூர் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் மாணவர்களுடன் பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்துகொண்டு தங்களது இளமைக்கால அனுபவங்கள், மறக்க முடியாத சம்பவங்களை நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்தனர். அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலை முத்து(23) என்ற இளைஞர் கையில் ஆயுதங்கள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றியது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக புதுக்கோட்டை போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த வாகனம் மோதி பலியானார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு இன்று (மே 12) பிரபல இயக்குனர் வெற்றிமாறன் வருகை தந்தார். அவருக்கு திரையரங்கு உரிமையாளர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் ரசிகர்களுடன் பல்வேறு சினிமா அனுபவங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இயக்குனரின் வருகையால் திரையரங்கில் விழாக்கோலம் பூண்டது.
தி.மலை அடுத்த ஏந்தல் பைபாஸ் சாலையில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ
.வே. கம்பன் சென்ற காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கம்பன் சென்ற கார் ரோட்டில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் கம்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரது ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இருவரும் அருணை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் இருப்பு பாதை காவல் நிலைய காவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர் காந்தி சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் நடைமேடையில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரயில்வே காவல்துறையினர் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலைய முகப்பில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இன்று (12.5.2024) ஏராளமான பயணிகள் இ பாஸ் தொடர்பான அறிவிப்புகள், இ பாஸ் சந்தேகங்களுக்கான தொலைபேசி எண்கள் . கடைசிநாள் போன்றவற்றை அதை பார்த்து தெரிந்து கொண்டனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக புகழ் பெற்ற நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சித்திரை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பின்னர் 1008 வடை மாலை சாத்திய பிறகு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம் தேன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மகா தீபம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்ட மாநில பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முதல் தாராபுரம் சாலை தெற்கு காவல் நிலையம் வரை அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதன் காரணமாக பழைய பேருந்து நிலையம் முதல் தெற்கு காவல் நிலையம் வரை செல்லும் சாலை அடைக்கப்பட்டு வாகன ஓட்டிகல் மாற்று பாதையில் செல்ல மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் இன்று (மே.12) தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று அங்கு டார்ச்லைட் கிடைக்கப் பெற்ற நிலையில் இன்று 10 பேர் கொண்ட தடவியல் துறை அதிகாரிகள் குழு அவர் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் வேறு எதுவும் தடயங்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.