Tamilnadu

News May 13, 2024

ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த மாணவன்

image

எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஹம்மது நபில். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் இன்று காலை ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் வாங்க எண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரயிலில் ஏற முயன்ற ஹம்மது நபில் எதிர்பாராதவிதமாக ரயிலிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 13, 2024

முதல்வருக்கு பலாப்பழம் வழங்கிய MLA

image

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கல்யாணசுந்தரம் தோட்டத்தில் விளையும் பலாப்பழங்களை சட்டசபையில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று அவர் சட்டசபையில் வழங்கினார். முன்னதாக அவர் முதலமைச்சர் அறையில் சென்று முதலமைச்சருக்கு பலா பழங்களை வழங்கினார்.

News May 13, 2024

மதுரை: சமணர் மலை சிறப்புகள்!

image

மதுரையில், மதுரை-தேனி இடையே கீழக்குயில்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது சமர்ண மலை. குன்றான இதில், தமிழிக் கல்வெட்டுக்களும், சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. மகாவீரர் அழகிய கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிற்பமும், அதனை செதுக்கியவரின் விவரமும் வட்டெழுத்துக்களாக உள்ளன. இதில் பல சமண சிற்பங்கலும், துறவிகளின் பெயர்களும் உள்ளன. மேலும் இங்கு கன்னட கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றன.

News May 13, 2024

‘உருளைக்கிழங்கு சரியான வளர்ச்சி இல்லை’

image

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பீட்ரூட், கோஸ், போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. நடப்பாண்டு போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு பயிரிட்டுள்ள காய்கறிகளுக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் பயிரிட்ட உருளைக்கிழங்கை அறுவடை செய்துவருகின்றனர். ஆனால் உருளைக்கிழங்கு பச்சை வெட்டு, சரியான வளர்ச்சி இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

News May 13, 2024

மாணவியை பாராட்டிய அமைச்சர்

image

ராணிப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த அபிநயா என்ற மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.கே.சுந்தர மூர்த்தி மற்றும் கழகத்தினர் உடன் இருந்தனர்.

News May 13, 2024

சட்டப்பணியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழுவில் தன்னார்வ சட்டப்பணியாளர் பணிக்கு ஓய்வு அரசு ஊழியர், ஆசிரியர், மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை<> Ecourt <<>>website -ல் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மே 24 மாலை 5:00 மணிக்குள் நேரிலோ, தபால் மூலம் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், சிவகங்கையில் அனுப்பிவைக்க வேண்டும்.

News May 13, 2024

வண்டலூர் பூங்காவின் சிறப்பு!

image

வண்டலூர் உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா செங்கல்பட்டில் அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலை ஒரு புலி, ஒரு சிறுத்தையுடன் 1855இல் நிறுவப்பட்டுள்ளது. இது மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைக்கப்பட்ட, இந்தியாவின் பெரிய உயிரியல் பூங்காவாகும். சுமார் 228.4 ஏக்கர் பரப்பளவில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பகுதி உட்பட 1,490 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.

News May 13, 2024

திருப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 9 பேர் கைது

image

உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலையில் மாற்றம் தென்பட்டது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை செய்ததில் 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 9 பேரை போக்சோவில் நேற்றிரவு கைது செய்தனர்.

News May 13, 2024

விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி ஏதேனும் செயல்படுவதாக தெரியவரும் பட்சத்தில் அதுகுறித்த தகவல்களை காவல்துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள 94439 67578 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

திருச்சி: சடலத்தில் நகை திருட்டு

image

திருச்சி புத்தூரை சேர்ந்தவர் சந்திரா.இவர் முதுமை காரணமாக நேற்று புத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்நிலையில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லும் போது, மருத்துவமனையில் பணிபுரிந்த ஹவுஸ் கீப்பிங் மோகன் என்பவர் மூதாட்டி கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலி,காதை அறுத்து கம்மலையும் திருடியுள்ளார்.இதுகுறித்து இன்று அரசு மருத்துவமனை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!