India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஜூம்சங்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று சுமார் பகல் 12 மணிக்கு மேல் கரும்புத் தோட்டத்திற்கு மேல் மின்சார ஒயரிலிருந்து தீப்பொறி பட்டு கரும்பு தோட்டம் முழுவதும் எறிந்தன. சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம காரிமங்கலம் ஒன்றியம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டு உள்ள இண்டமங்கலம் காலணியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில், இப்பகுதியில் ஒரு மாத காலமாக குடிக்கக்கூட தண்ணி இல்லை என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர், களத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவானது இன்று மே.13-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் கடந்த 9ம் தேதி அந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சோர்வடைந்த நிலையில் படுத்து கிடந்தது. வனத்துறையினர் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் ஊராட்சியில் உள்ள சேகோ ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ பிடித்தது. உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயணைத்தனர். சேகோ ஆலையில் உள்ள பாய்லர் தீ பிடித்தது என தெரிய வருகிறது. இதனால் பெரும் சேதம் காப்பாற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள தொட்டனம்பட்டியில் இன்று கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவி சுசீலா (39) என்பவரை குமரவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுசீலா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.120-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், தற்போது 1 கி.லோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், கேரட் ரூ70க்கும், அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும், எலுமிச்சை ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முதல் தெற்கு போலீஸ் நிலையம் வரையிலான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனால் தாராபுரம் சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் டி சி ஒன் பாயிண்ட், எம் ஜி பி ஷோரூம் வழியாகவும், காங்கேயத்திலிருந்து பழைய பஸ் நிலையம் வரும் வாகனங்கள் ராஜீவ் நகர் மற்றும் எம் ஜி பி ஷோரும் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி பணியாற்றிவந்தவர் பிரஜேஸ் யாதவ் (33). இவரது சொந்த ஊர் பீகார். இந்நிலையில் நேற்றிரவு பிரஜேஸ் யாதவ் மதுபோதையில் கம்பெனியில் உள்ள மின்சார பெட்டியில் கைவைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 தினங்கள் கடந்துவிட்டன. போலீஸ் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் வெளியாகின்றன. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் 4 மணி நேரமாவது சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என உடற்கூறு ஆய்வு முடிவுகளின்படி சந்தேகிக்கப்படுகிறது. அவர் உடலில் கடப்பாக்கல் மற்றும் முள் கம்பிகள் வைத்து முழுமையாக கட்டப்பட்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.